News June 21, 2024
தர்மபுரி அருகே அதிகளவு பாரம் ஏற்றுவதால் விபத்து அபாயம்

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பொம்மிடி கடத்தூர், ராமியம்பட்டி, ஒடசல்பட்டி, மணியம்பாடி உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்து விதிகளை மதிக்காமல் டிப்பர், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களுக்கு அதிகமான பாரங்களை ஏற்றிச் செல்வதால், விபத்து நடைபெறும் அபாயம் உள்ளது. இதனை காவல்துறை மற்றும் போக்குவரத்து அதிகாரிகள் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Similar News
News November 5, 2025
தருமபுரியில் கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000!

தருமபுரி மாவட்டத்தில் முதல் 2 குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக 3 தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை<
News November 5, 2025
ஒகேனக்கல் பரிசல் துறை ரூ.1.91 கோடிக்கு ஏலம்!

ஒகேனக்கல், தருமபுரி மாவட்டத்தின் சிறந்த சுற்றுலா தலமாக உள்ளது. இந்த ஆண்டுக்கான பரிசல் துறை ஏலம் நேற்று (நவ.04) பென்னாகரம் பி.டி.ஓ., அலுவலகத்தில் நடந்தது. ஏலத்திற்கு பென்னாகரம் பி.டி.ஓ.,க்கள் சத்திவேல், லோகநாதன் தலைமை வகித்தனர். கடந்த ஆண்டு ஜி.எஸ்.டி-யுடன் ரூ.1.73 கோடிக்கு போன நிலையில், இந்தாண்டு ஜி.எஸ்.டி-யுடன் ரூ.1.91 கோடிக்கு ஏலம் போனது. பின் பொச்சாரம்பட்டியை சேர்ந்த மாயக்கண்ணன் ஏலம் எடுத்தார்.
News November 5, 2025
தருமபுரி: ஆதார் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு!

இந்தியாவில் மிக முக்கிய ஆவணமாக ஆதார் கார்டு விளங்குகிறது. அப்படிப்பட்ட ஆதார் கார்டு தொலைந்து விட்டால் கவலை வேண்டாம். myaadhaar.uidai.gov.in/retrieve-eid-uid என்ற இணையதளத்திற்கு சென்று உங்கள் பெயர், ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை பதிவிட்டால் போதும், உங்கள் ஆதார் எண் கிடைத்துவிடும். அதைவைத்து புதிய ஆதார் அட்டைக்கு எளிதாக விண்ணப்பித்து கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க


