News July 9, 2025
தர்மபுரியில் மகளிர் உரிமை தொகை குறித்து அறிவிப்பு

தர்மபுரி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறத் தகுதியுள்ள விடுபட்ட மகளிர் எவரேனும் இருப்பின் உங்களுடன் ஸ்டாலின் முகாமிற்குச் சென்று விண்ணப்பத்தினை பெற்று பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் தங்களது விண்ணப்பத்தினை அளிக்கலாம். இந்த முகாமானது வரும் 15 ஆம் தேதி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் நடைபெறுகிறது. இதனை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். *SHAREIT*
Similar News
News July 9, 2025
தர்மபுரியில் உள்ளூரிலேயே அரசு வேலை அறிவிப்பு

தமிழகத்தில் 2229 கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்பபடவுள்ளது. இதில், தர்மபுரியில் மட்டும் 39 பணியிடங்கள் உள்ளன. 10th-ல் தேர்ச்சி/ தோல்வியடைந்தவர்களும் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.11,100-ரூ.35,100 வரை சம்பளம் பெறலாம். 10 ஆண்டுகளுக்கு பின் VAO-வாக பதவி உயர்வு வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் ஆக.,4-க்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு (04342-296188)தொடர்பு கொள்ளவும். ஷேர் பண்ணுங்க. <<17001779>>தொடர்ச்சி<<>>
News July 9, 2025
கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிப்பது எப்படி?

▶️விண்ணப்பிக்கும் நபர் அதே பகுதி / தாலுகாவை சேர்ந்தவராக இருக்க வேண்டும்
▶️கட்டாயம் தமிழ் பாடத்தைக் கொண்டு படித்திருக்க வேண்டும்.
▶️சைக்கிள்/ இரு சக்கர வாகனம் இயக்க தெரிந்திருக்க வேண்டும்
▶️எழுத்துத் தேர்வு, நேர்காணல் என இருக்கட்டங்களாக தேர்வு நடைபெறும்
▶️மேலும் தகவலுக்கு தர்மபுரி மாவட்ட ஆட்சியரகம் / உங்கள் பகுதி தாலுகா அலுவலகத்தை அணுகலாம். *அரசு வேலைக்கு செல்ல நினைக்கும் நண்பர்களுக்கு பகிரவும்*
News July 9, 2025
தருமபுரி மாவட்டத்தில் பேச்சுப் போட்டிகள் தேதி அறிவிப்பு

தருமபுரி மாவட்டத்தில் அண்ணல் அம்பேத்கர்,முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி ஆகியோரின் பிறந்த நாளுக்கான பேச்சுப் போட்டிகள் முறையே 16,17 தேதி ஆகிய நாள்களில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி தருமபுரி அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 9 மணிக்கு தொடங்கி நடைபெறவுள்ளது. இப்போட்டிகளில் அனைத்துப் பள்ளிகளிலும் 6 ஆம் வகுப்பு முதல் 12 வரை மட்டும் கலந்து கொள்ளலாம்.