News July 5, 2025
தர்மபுரியில் போலீசார் ரோந்தில் ஈடுபாடு

தர்மபுரி மாவட்டத்தில் இன்று இரவு முழுவதும் காவல்துறை ரோந்து பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. மாவட்ட இரவு ரோந்து அலுவலராக திரு.பி.ராமமூர்த்தி, அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். தர்மபுரி, அரூர், பென்னாகரம் மற்றும் பாலக்கோடு ஒவ்வொரு காவல் நிலையத்துக்கும் பொறுப்பான போலீஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு காவல் நிலையத்திற்கான தொடர்பு எண்களும் வெளியிடப்பட்டுள்ளன. தொடர்பு எண்கள் மேலே உள்ளது.
Similar News
News July 5, 2025
சமூக நல்லிணக்க ஊராட்சி விருது பெற விரும்புவோர்

சாதிபாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தையும், சமூக ஒற்றுமையினையும் கடைப்பிடிக்கும் ஊராட்சிகளை ஊக்குவித்து கௌரவிக்கும் வகையில், 10 ஊராட்சிகளுக்கு சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுடன் ரூ. 1 கோடி வழங்கப்பட உள்ளது. அதன்படி தருமபுரியில் வரும் 2025ஆம் ஆண்டிற்காக விருது பெற விரும்புவோர் விண்ணப்பப் படிவத்துடன், அதற்குரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்கள் மேலே உள்ள புகைப்படத்தை பார்க்கவும்
News July 4, 2025
ஏரியூரில் திமுக உறுப்பினர் சேர்க்கை பயிற்சி

தருமபுரி கிழக்கு மாவட்டம் ஏரியூர் கிழக்கு ஒன்றியம் திமுக BDA நிர்வாகிகளுக்கு ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை பயிற்சி இன்று (ஜூலை 4) நடைபெற்றது. இந்த நிகழ்வானது ஏரியூர் ஒன்றிய திமுக செயலாளர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில், திமுக ஏரியூர் ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.
News July 4, 2025
ஆட்சியர்(வளர்ச்சி)/திட்ட இயக்குநர் அவர்களின் அரசு வாகனம் ஏலம்

தருமபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி)/திட்ட இயக்குநர் அவர்களின் அலுவலக அரசு வாகன எண் TN 29 AJ 5584 (Ambassador grand 1800) (எரிசக்தி – பெட்ரோல்) கழிவு செய்யப்பட்டுள்ளது. கழிவு செய்யப்பட்ட வாகனத்தை 15 தேதி 4.00 மணியளவில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) /திட்ட இயக்குநர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, தருமபுரி அலுவலகத்தில் பொது ஏலம் விடப்படவுள்ளது. என ஆட்சியர் சதீஷ் தகவல்