News July 8, 2025
தர்மபுரியில் இரவு ரோந்து செல்லும் போலீஸ் விவரங்கள்!

தர்மபுரி மாவட்ட காவல்துறை 08.07.2025 தேதிக்கான இரவு ரோந்து செல்லும் அலுவலர்கள் விபரங்களை வெளியிட்டுள்ளது. மாவட்ட ரோந்து அலுவலராக கே.எம். மனோகரன் நியமிக்கப்பட்டுள்ளார். தர்மபுரி, அரூர், பென்னாகரம் மற்றும் பாலக்கோடு ஆகிய அனைத்து காவல் நிலையங்களுக்கும் பொறுப்பான இரவு ரோந்து அதிகாரிகள் பெயர் மற்றும் அவர்களின் தொடர்பு எண்கள் பட்டியலாக வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அவசரத் தேவைக்காக தொடர்புக் கொள்ளலாம்.
Similar News
News July 8, 2025
நொரம்பு மண் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்

பாலக்கோடு சுற்றுவட்டாரப் பகுதியான எர்ரணஅள்ளி மேம்பாலம் அருகே காவல்துறையினர் நடத்திய சோதனையில், ஏரியில் இருந்து சட்டவிரோதமாக நொரம்பு மண் கடத்தி வந்த டிப்பர் லாரியை தடுத்து நிறுத்தினர். காவலர்களைக் கண்டதும் ஓட்டுநர் வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பி ஓடி தலைமறைவானார். சுமார் 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அந்த டிப்பர் லாரியை பறிமுதல் செய்த போலீசார், பாலக்கோடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
News July 8, 2025
வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் இயக்கம்

தருமபுரி மாவட்டத்தில் வேளாண்மைப் பொறியியல் துறை சார்பில் வருகிற 09.07.2025 அன்று காலை 10 மணி அளவில் நல்லம்பள்ளி வட்டம், இண்டுர் உள்வட்டம். சோமனஅள்ளி கிராமத்தில் மாவட்ட அளவிலான வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் இயக்கம் மற்றும் பராமரிப்பு முறை குறித்து விவசாயிகள் தெரிந்து கொண்டு செயல்படுத்தும் நோக்கில் முகாம் நடைபெற உள்ளதாக தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சதீஷ் தெரிவித்துள்ளார்.
News July 8, 2025
தருமபுரி அரசு கலை கல்லூரியில் கல்லூரி சந்தை

தருமபுரி அரசு கலை & அறிவியல் கல்லூரியில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் 2025-26 ஆம் ஆண்டிற்கான மாவட்ட வழங்கல் & விற்பனை சங்கத்தின் மூலம் பொருட்கள் விற்பனை & கண்காட்சி இன்று முதல் ஜூலை 10 வரை நடைபெறுகிறது. இந்த கல்லூரி சந்தையை மாவட்ட ஆட்சியர் சதீஷ் இன்று காலை துவக்கி வைத்தார். இதில், கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்று பயனடைய மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.