News October 24, 2024

தர்மபுரியில் இன்று அமைச்சர்கள் சுற்றுப்பயணம்

image

தர்மபுரியில் இன்று காலை 9.30 க்கு தர்மபுரி நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் ஆய்வு மற்றும் திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா, மாவட்ட விவசாயிகள் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குதல், காலை 11.30 க்கு பென்னாகரம் புதிய பேருந்து நிலையம் திறந்து வைத்தல், மதியம் 1.30க்கு அரூர், மாரண்டஹள்ளி பேருந்து நிலையங்களை திறந்து வைத்தல் போன்ற நிகழ்வுகளில் அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொள்ளவிருக்கிறார்.

Similar News

News December 28, 2025

தருமபுரி: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா பெறுவது எப்படி?

image

ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவச பட்டா பெறலாம். இந்த தகுதிகள் இருந்தால் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்பு திட்டம் தெரிந்தவர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க!

News December 28, 2025

தருமபுரி: தூக்கில் பிணமாக தொங்கிய +2 மாணவன்!

image

நல்லம்பள்ளி அடுத்த தண்டுக்காரம்பட்டியைச் சேர்ந்த பிரணீத்குமார் (17). பிளஸ்-2 மாணவரான இவர், அரையாண்டுத் தேர்வு விடுமுறையில் வீட்டில் இருந்தபோது, நேற்று இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். காலையில் மாணவர் பிணமாகத் தொங்குவதைக் கண்டு பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்து வந்த தொப்பூர் போலீசார், உடலை மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

News December 28, 2025

தருமபுரி: 2வயது குழந்தை தண்ணீரில் மூழ்கி பலி!

image

கடத்தூர் அருகே நல்லகுட்லஅள்ளி கிராமத்தில், கட்டிட மேஸ்திரி கோவிந்தசாமியின் 2 வயது பெண் குழந்தை சுவாதி, வீட்டில் விளையாடிக்கொண்டிருந்தபோது திடீரென மாயமானது. தேடிப் பார்த்தபோது, பக்கத்து வீட்டில் புதிதாகக் கட்டப்பட்டு வந்த தண்ணீர் தொட்டியில் விழுந்து குழந்தை உயிரிழந்து கிடந்தது தெரிந்தது. குழந்தையின் உடலை மீட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!