News January 23, 2025
தர்மபுரியில் அடுத்த மாதம் ஜல்லிக்கட்டு நடத்த ஏற்பாடு

தடங்கம் கிராமத்தில் கடந்த 22 ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடத்தப்படுவதாக தகவல்கள் வெளியானது. ஆனால் ஜல்லிக்கட்டு நடத்த அரசு அனுமதி பெறவில்லை என மாவட்ட ஆட்சியர் சாந்தி அறிக்கை வெளியிட்டு இருந்தார். இந்நிலையில், ஜல்லிக்கட்டு அனுமதி குறித்து தாபா சிவா மாவட்ட ஆட்சியரை சந்தித்தார். தாபா சிவா பேசும்போது ”மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெற்று பிப்.மாத தொடக்கத்தில் ஜல்லிக்கட்டு நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.
Similar News
News September 16, 2025
ஒகேனக்கலில் முழுவதுமாக தடை நீக்கம்

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 9,500 கன அடியாக குறைந்ததால், சுற்றுலாப் பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. இதனால், குளிக்கவும், பரிசல் சவாரிக்கும் மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு விதிகளைப் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தீயணைப்புத் துறையினர் பாதுகாப்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
News September 16, 2025
தர்மபுரியில் தூய்மை பணியாளர்கள் தர்ணா போராட்டம்

தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஊதியம் வழங்காததைக் கண்டித்து தூய்மைப் பணியாளர்கள் இன்று காலை 9 மணி முதல் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஊதியம் கிடைத்த பிறகே பணிக்குத் திரும்புவோம் எனத் தெரிவித்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
News September 16, 2025
தருமபுரி: டிகிரி இருந்தால் போதும்! ரயில்வேயில் வேலை

தமிழக ரயில்வேயில் Seclection controller பணிக்கான வேலை வாய்ப்பு வெளியாகியுள்ளது. இதற்கு எதாவது ஒரு டிகிரி முடித்த 20-30 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த வேலைக்கு மொத்தம் 368 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மாத சம்பளம் ரூ.35,400 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கு <