News July 18, 2024

தர்மபுரி:காவிரி உபரி நீர் திட்டம் கொண்டு வரப்படும்

image

தர்மபுரி மக்களவை தொகுதியில் பாமக சார்பில் போட்டியிட்ட சௌமியா அன்புமணி தருமபுரியில் உள்ள அதகபாடி, செக்காரபட்டி உள்ளிட்ட 20 கிராமங்களுக்கு நேற்று நேரில் சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர்,ராமதாஸ் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு போராடி சாதித்ததைப் போல காவிரி உபரி நீர் திட்டத்தை பாமக கொண்டு வரும் எனத் தெரிவித்தார்.

Similar News

News November 5, 2025

தருமபுரி: காவல்துறை சார்பில் பெட்டிஷன் மேளா

image

தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் இன்று (நவ.05) ஆம் தேதி காலை 10.00 மணி முதல் 2 மணி வரை தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.S.மகேஸ்வரன், தலைமையில் பொதுமக்களின் குறை தீர்க்கும் முகாம் (பெட்டிஷன் மேளா) நடைபெற்றது. இப்பெட்டிஷன் மேளாவில் பொதுமக்களால் வழங்கப்பட்ட 73 மனுக்கள் மீது விசாரணை செய்யப்பட்டு, 73 மனுக்களுக்கும் தீர்வு காணப்பட்டது.

News November 5, 2025

இரவு நேர ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரம்

image

தர்மபுரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று (05.11.2025) இரவு நேர ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வாளர், சிவராமன் தலைமையில், அதியமான்கோட்டை பகுதியில் சேகர் , தோப்பூரில் குமரவேல் , மதிகோன்பாளையத்தில் மகாலிங்கம் மற்றும் கிருஷ்ணாபுரத்தில் குப்புசாமி ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். பொதுமக்கள் அவசர உதவிக்கு இவர்களை அணுகலாம்.

News November 5, 2025

தருமபுரி மக்களே – இன்று இதை கண்டிப்பாக பண்ணுங்க!

image

ஐப்பசி பெளர்ணமி நாளான இன்று (நவ.5) மாலை 5 மணிக்கு மேல் உங்களின் வீடுகளிலோ அல்லது அருகாமையில் உள்ள கோயில்களிலோ 5,7,11,21,51 அல்லது 101 என ஒற்றைப்படை எண்ணிக்கையில் மண் அகல் விளக்குகளை ஏற்றுங்கள். இப்படி வழிபடுவது குடும்பத்திற்கு மன நிம்மதி மற்றும் சிறப்பு தரும். அதேபோல், இந்த விளக்குகளை குறைந்தது 2 மணிநேரம் எரியும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!