News August 11, 2025

தருமபுரி: 8வது போதும்.. கைநிறைய சம்பளத்தில் அரசு வேலை!

image

தருமபுரி மக்களே, தமிழ் வளர்ச்சித் துறையின் கீழ் செயல்படும், செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்ட இயக்ககத்தில், அலுவலக உதவியாளர் பணியிடம் நிரப்பப்படவுள்ளது. ரூ. 15,700 முதல் ரூ. 50,000 வரை சம்பளம் வழங்கப்படும். 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. விண்ணப்பிக்கும் முறை மற்றும் விவரங்களை அறிய 044-29520509 எண்ணுக்கு அலுவலக நேரங்களில் அழைக்கலாம். கடைசி தேதி 16.08.2025 ஆகும். SHARE IT

Similar News

News November 15, 2025

தருமபுரி: SIM CARD வைத்திருப்போர் இதை தெரிஞ்சுக்கோங்க!

image

இந்தியாவில் ஒருவர் 9 சிம் கார்டுகள் மட்டுமே வைத்திருக்க முடியும். எனவே, உங்கள் ஆதார் விவரங்களைப் பயன்படுத்தி வேறு யாராவது சிம் கார்டு வாங்கி இருக்கிறார்களா என்பதைச் சரிபார்க்க, இந்த <>லிங்கில்<<>> உங்கள் எண்ணை உள்ளிட்டு OTP மூலம் உள்நுழையலாம். உங்கள் பெயரில் உள்ள அனைத்து எண்களின் பட்டியலும் காட்டப்படும். அடையாளம் தெரியாத எண்கள் இருந்தால் உடனடியாகப் புகார் செய்து பிளாக் செய்யலாம். ஷேர் பண்ணுங்க!

News November 15, 2025

தருமபுரி: டூ-வீலர் விபத்தில் இளைஞர் பலி!

image

தருமபுரி: மகேந்திரமங்கலம் அடுத்த பொம்மனுார் கிராமத்தை சேர்ந்த சாந்தகுமார் (24) அரசு போக்குவரத்து கழகத்தில் தற்காலிக நடத்துனராக பணி செய்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் பைக்கில் சென்றவர், முல்லாசன-ஹள்ளி அருகே எதிர்பாராமல் முள்வேலியில் மோதி விபத்துக்குள்ளானர். இதில் படுகாயமடைந்த அவர், மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இது குறித்து பாலக்கோடு போலீசார் விசாரிக்கின்றனர்.

News November 15, 2025

தருமபுரியில் 3 நாட்களுக்கு குடிநீர் நிறுத்தம்!

image

தருமபுரியில் வரும் நவ.18, 19, 20 ஆகிய தேதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால், குடிநீர் வினியோகம் நிறுத்தப்படும் என ஆட்சியர் சதீஸ் அறிவித்துள்ளார். அதன்படி, பாலக்கோடு, பாப்பாரபட்டி, காரிமங்கலம், மாரண்டஹள்ளி பேரூராட்சிகளிலும், பென்னாகரம், காரிமங்கலம், பாலக்கோடு ஆகிய ஒன்றியங்களுக்கு உட்பட்ட 68 பஞ்.,களிலும் ஒகேனக்கல் குடிநீர் வழங்க இயலாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!