News November 25, 2025
தருமபுரி: 2,147 செவிலியர் பணியிடங்கள்- நேர்காணல் இல்லை!

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 2,417 கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 18 வயது நிறைவடைந்த பெண்கள் இதற்கு விண்பிக்கலாம். இந்த பணிக்கு நேர்காணல் கிடையாது. மதிப்பெண் அடிப்படையில் பணி வழங்கப்படும். மேலும், மாதம் ரூ.19,500 – ரூ.71,900 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
Similar News
News November 26, 2025
தர்மபுரி: வீட்டு வாசலில் வாலிபர் சடலம் !

காரிமங்கலம் அருகே, பெரியாம்பட்டி அடுத்த, ஜொல்லம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சரவணன்(32) என்ற திருமணம் ஆகாத நபர் தனது வீட்டின் முன்பாக ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தார். இது குறித்து காரிமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் உடலை கைப்பற்றி பிரத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 26, 2025
ஒகேனக்கல்: போதையில் குளித்த வட மாநில இளைஞர் பலி

தர்மபுரி: பென்னாகரம் வட்டம், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மதுபோதையில் குளித்துக் கொண்டிருந்தபோது நீரில் மூழ்கிய பிகாா் மாநில இளைஞரின் உடல் இரண்டு நாள்களுக்குப் பிறகு நேற்று(நவ.25) செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து ஒகேனக்கல் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
News November 26, 2025
தர்மபுரியில் இன்றைய மின் தடைப் பகுதிகள்

தர்மபுரி: காரிமங்கலம் & தொப்பூர் துணை மின் நிலையங்களில் இன்று(நவ.26) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் கோவிலூர், பைசுஅள்ளி, கெரகோடஅள்ளி, சப்பாணிப்பட்டி, குண்டலப்பட்டி, பொம்மஅள்ளி, மாட்லாம்பட்டி, தொப்பூர், உம்மியம்பட்டி, T.கானிகரள்ளி, செட்டிக்கோம்பை, சந்திரநல்லூர் அதன் சுற்றுவட்டாரத்தில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.


