News February 26, 2025
தருமபுரி வெடி விபத்து; ஒருவர் கைது

நேற்று முன்தினம் பூமிசமுத்திரத்தில் பட்டாசு குடோன் வெடித்ததில் 3 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் கிராம நிர்வாக அலுவலர் கிருபாகரன் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் பட்டாசு குடோன் உரிமையாளர் சின்னதுரையை கம்பைநல்லூர் காவலர்கள் நேற்று பிப்ரவரி 25 மாலை கைது செய்தனர். மேலும் பொதுமக்கள் நலன் கருதி இந்த பட்டாசு ஆலை நிரந்தரமாக மூட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
Similar News
News March 6, 2026
தருமபுரி: இந்த கார்டு இருந்தால் ரூ.5 லட்சம்

தருமபுரி மக்களே திடீரென மருத்துவ செலவு வந்தால் கையில் பணம் இல்லை என்ற கவலை இனி வேண்டாம். மத்திய அரசின் சுகாதார காப்பீட்டு திட்டத்தின் கீழ் வழங்கப்படும். Ayushman Card இருந்தால் அரசு மற்றும் சில தனியார் மருத்துவமனையில் இலவசமாக தரமான மருத்துவத்தை பெறலாம். அதன்மூலம் ஒரு குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வரை வழங்கப்படும். Ayushman Cardஐ பெற இப்போதே இங்கு <
News March 6, 2026
அறிவித்தார் தருமபுரி ஆட்சியர்

தருமபுரி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு, தாட்கோ மற்றும் டாக்டர் ரெட்டி நிறுவனம் இணைந்து 45 நாட்கள் சூரிய மின் பலகை பொருத்தும் பயிற்சியை வழங்குகின்றன. இதற்கு 10-ம் வகுப்பு முடித்தவர்கள் www.tahdco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் சதீஷ் தெரிவித்துள்ளார். பயிற்சியை முடிக்கும் இளைஞர்களுக்கு NSDC சான்றிதழும் வழங்கப்படவுள்ளது.
News March 6, 2026
தருமபுரி: இரவு ரோந்து ஆய்வாளர்கள் விவரம்!

தருமபுரி மாவட்டத்தில் நேற்று (மார்ச்.05), இரவு முதல் இன்று (மார்ச்.06) காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இரவு நேரத்தில் பொதுமக்கள் அவசர கால உதவி எண் 100, அல்லது இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ள மொபைல் நம்பர்களை தொடர்பு கொள்ளலாம். மேலும் இந்த தகவலை மற்றவர்களிடம் ஷேர் செய்யவும்.


