News October 21, 2025

தருமபுரி: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்

image

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் pmay-urban.gov.in என்ற இணையதளம் மூலம் வரும் டிச.31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். பிறரும் பயன்பெற SHARE பண்ணுங்க.

Similar News

News October 21, 2025

தருமபுரி: சீட்டு கட்டி ஏமாந்தால் என்ன செய்வது

image

சீட்டு நடத்துபவர்கள் ஏமாற்றினால் உடனே அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளியுங்கள். மாவட்ட ஆட்சியரிடம் ஏமாற்றப்பட்டது குறித்து மனுவாக அளிக்கலாம். சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க வழக்கறிஞரை அணுகுவது நல்லது. புகாரில், சீட்டு கட்டிய விவரங்கள், ஏமாற்றப்பட்ட விதம், எவ்வளவு பணம் இழந்தீர்கள் போன்ற விவரங்களை தெளிவாக குறிப்பிடவும். அதற்கான ஆதாரமாக வைத்துக்கொள்ளவும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News October 21, 2025

தருமபுரி: வீர மரணமடைந்த காவலர்களுக்கு அஞ்சலி

image

இந்தியா முழுவதும் பல்வேறு சம்பவங்களில் பணியின்போது வீர மரணமடைந்த காவலர்களுக்கு ஆண்டுதோறும் அக்.21ம் தேதி அஞ்சலி செலுத்துவது வழக்கம். இதையொட்டி தருமபுரி மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் உள்ள காவலர் நினைவுச்சின்னத்திற்கு, இன்று தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன், துப்பாக்கி குண்டுகள் முழங்க வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின் கலெக்டர், முக்கிய அலுவலர்கள் இந்நிகழ்வில் இருந்தனர்.

News October 21, 2025

தருமபுரி: நாய்கள் தொல்லையால் மக்கள் அவதி

image

தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சில நாட்களாக குறிப்பாக நெசவாளர்காலனி, இலக்கியம்பட்டி, செந்தில்நகர், நெடுமாறன் நகர், காந்திநகர் போன்ற இடங்களில் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து வருவதால் குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பிரச்சனைக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

error: Content is protected !!