News December 23, 2025

தருமபுரி: விபத்தில் 2 வாலிபர்கள் பரிதாப பலி!

image

பாலக்கோடு வட்டம், சீரியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராகுல்(28). வேப்பிலைஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ஹரிநாத்(25). இருவரும் நேற்று(டிச.22) முற்பகலில் பாலக்கோட்டிலிருந்து பெல்ரம்பட்டி நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றனர். பெல்ரம்பட்டி பகுதி தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது எதிரே வந்த ஆட்டோ எதிர்பாராத விதமாக மோதியதில், இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

Similar News

News December 23, 2025

தர்மபுரி: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

image

1.முதலில் cmcell.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.
2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்க

News December 23, 2025

தர்மபுரி: உங்கள் PAN கார்டு இனி செல்லாது!

image

பான் கார்டு பெறுவதில் நடைபெறும் மோசடிகளை தடுக்கும் வகையில், பான் கார்டுடன் கட்டாயம் ஆதார் கார்டினை வரும் டிச.31-க்குள் இணைக்க வேண்டுமென வருமான வரித்துறை அறிவித்துள்ளது. தவறும்பட்சத்தில் உங்கள் பான் கார்டு ரத்து செய்யப்பட்டு, வங்கி பரிவர்த்தனைகள் முடக்கப்படும். இதனை தடுக்க eportal.incometax.gov.in என்ற இணையத்தளத்திற்கு சென்று உங்கள் ஆதார் & பான் கார்டினை மிக எளிதாக இணைத்து கொள்ளலாம்.(SHARE)

News December 23, 2025

தருமபுரி: மலிவு விலையில் கார் வேண்டுமா..?

image

தருமபுரி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு, உதவி செயற்பொறியாளரின் பயன்பாட்டில் இருந்த ஈப்பு TN 09 G 1289 முதிர்ந்த நிலையில் கழிவு நீக்கம் செய்யப்பட்டுள்ளது. கழிவு செய்யப்பட்ட வாகனத்திற்கு வரும் டிச.29ஆம் தேதி அன்று முற்பகல் 11 மணியளவில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏலம் நடைபெறுகிறது. ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் கலந்து கொண்டு விலைப்புள்ளியை கோரலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!