News October 29, 2025
தருமபுரி: ரயில்வேயில் 3,058 பணியிடங்கள்.. APPLY NOW!

தருமபுரி மக்களே, 2025-ம் ஆண்டுக்கான கமர்சியல் உடன் டிக்கெட் கிளார்க், டைப்பிஸ்ட் போன்ற பணிகளுக்கு 3,058 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு 12th படித்து 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம. இந்த பணிக்கு மாத சம்பளமாக ரூ.19,900 – ரூ.21,700 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் நவ.27ம் தேதிக்குள் <
Similar News
News October 29, 2025
காவல் கண்காணிப்பாளர் தலைமையில் பெட்டிஷன் மேளா

தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் இன்று அக்.29 குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது. காலை 10.00 மணி முதல் 2.00 மணி வரை தருமபுரி மாவட்ட மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியம் அவர்களின் தலைமையில் பொதுமக்களின் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் பொதுமக்களால் வழங்கப் 73 மனுக்கள் மீது விசாரணை செய்யப்பட்டு, 73 மனுக்களுக்கும் தீர்வு காணப்பட்டது.
News October 29, 2025
தர்மபுரி மாவட்ட காவல்துறை இரவு ரோந்து விபரம்

தருமபுரி மாவட்டம் முழுவதும் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு (அக்-29) இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மாவட்ட காவல் துறையால் வெளியிடப்பட்டுள்ளது. ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மற்றும் தொடர்புக்கொள்ள தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 100 அல்லது 04342-233850 உதவி எண்ணை தொடர்பு கொள்ளவும். இதை அனைவருக்கும் ஷேர் செய்யவும்.
News October 29, 2025
நீச்சல் போட்டி வெற்றி பெற்றவர்களுக்கு ஆட்சியர் வாழ்த்து

அக்.29 மாநில அளவிலான பாரா நீச்சல் சாம்பியன்சிப் போட்டிகளில் தருமபுரி மாவட்டத்தைச் சார்ந்த வெங்கடேசன், விஜயகுமார், கார்த்திகேயன் ஆகியோர் 7 தங்கப்பதக்கம் மற்றும் 2 வெள்ளிப்பதக்கம் வென்றனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் சதீஸ், அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா,மாவட்ட விளையாட்டு அலுவலர் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


