News August 10, 2025

தருமபுரி: ரயில்வேயில் சூப்பர் வேலை; கைநிறைய சம்பளம்

image

ரயில்வேயில் மருத்துவப் பிரிவில் செவிலியர் கண்காணிப்பாளர், பார்மசிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 434 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. 12th, நர்சிங், B.Pharma என பணிகளுக்கு ஏற்றவாறு கல்வி தகுதி மாறுபடும். மாதம் ரூ.25,500-ரூ.44,900 வரை சம்பளம் வழங்கப்படும். 18- 40 வயது உள்ளவர்கள் <>இந்த லிங்கில்<<>> வரும் செ.8ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

Similar News

News August 12, 2025

தருமபுரி மாவட்ட இரவு ரோந்து பணி விவரம்

image

தருமபுரி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (ஆகஸ்ட் 12) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் விவரம் வெளியிட்டுள்ளது‌. தலைமை அதிகாரியாக R. குணவர்மன்
நியமிக்கப்பட்டுள்ளார். தருமபுரி புஷ்பராணி, அரூர் ஆதமலி, பென்னாகரம் முரளி , மற்றும் பாலக்கோடு பார்த்திபன் ஆகியோர் பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களை பொதுமக்கள் அவசர தேவை எனில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 12, 2025

தர்மபுரி மாணவர்கள் கவனத்திற்கு!

image

தருமபுரி, காரிமங்கலத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐ.டி.ஐ.) பல்வேறு படிப்புகளுக்கான சேர்க்கை நடைபெறுகிறது. மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.750 உதவித்தொகை, புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000 இலவச பேருந்து பாஸ், புத்தகங்கள், பாடக் கருவிகள், சீருடைகள், ஷூ,மிதிவண்டி ஆகியவை வழங்கப்படும். குறைந்த இடங்களே உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க இம்மாதம் 30ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News August 12, 2025

தருமபுரியில் ட்ரோன் பறக்கத் தடை

image

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தருமபுரி மாவட்டத்திற்கு பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகை தர உள்ளார். இதன் காரணமாக, பாதுகாப்பு கருதி ஆகஸ்ட் 16 (சனிக்கிழமை) மற்றும் ஆகஸ்ட் 17 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய இரண்டு நாட்களுக்கு தருமபுரி மாவட்டத்தில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது என தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஷ் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!