News September 27, 2025

தருமபுரி மாவட்ட காவல்துறை இரவு ரோந்து விபரம்

image

தருமபுரி மாவட்டம் முழுவதும் நேற்று (செ.26) இரவு 9 மணி முதல் இன்று காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மாவட்ட காவல் துறையால் வெளியிடப்பட்டுள்ளது. திரு. சூர்யா DSP தலைமையில் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மற்றும் தொடர்புக்கொள்ள தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 100 அல்லது 04342-233850 உதவி எண்ணை தொடர்பு கொள்ளவும். இதை அனைவருக்கும் ஷேர் IT

Similar News

News January 7, 2026

தருமபுரியில் நாளை பவர் கட்!

image

பாப்பிரெட்டிப்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (ஜன.8) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் பாப்பிரெட்டிப்பட்டி, வெங்கடாசமுத்திரம், மோளையானூர், தேவராஜபாளையம், சாமியாபுரம் கூட்ரோடு, இருளப்பட்டி, மாரியம்பட்டி, பூதநத்தம், அலமேலுபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 7, 2026

தருமபுரி: பாட்டிலுக்கு ரூ.10 கேட்டால்.., உடனே CALL!

image

தருமபுரி மாவட்ட மக்களே.., உங்கள் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் பிளாக்கில் விற்பனை நடப்பது, குறிப்பிட்ட நேரத்தை தாண்டி விற்பனை, விலைக்கு மேல் ரூ.10 கேட்பது, மேலும் எந்த வித மோசடி செயல்கள் நடந்து வந்தாலும், அதுகுறித்து உடனடியாக 04342-260042 என்ற லஞ்ச ஒழிப்புத் துறை எண்ணிற்கு புகார் அளிக்கலாம். உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 7, 2026

தருமபுரியில் அதிரடி கைது!

image

காரிமங்கலம் அருகே உள்ள ஸ்ரீராமபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் குமாா் (41), விவசாயியான இவர், பட்டா மாற்றத்திற்கு விண்ணப்பித்துள்ளார். இந்த விண்ணப்பம் தொடா்பாக, காரிமங்கலம் வட்டாட்சியரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கம்பைநல்லூா் பகுதி நில அளவையராக பணியாற்றி வரும் சௌந்தரராஜன் (32), ரூ.13 ஆயிரத்தை அளிக்க வேண்டும் எனக் கூறியுள்ளாா். இதுகுறித்த புகாரில் சௌந்தரராஜனை போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!