News August 31, 2025
தருமபுரி மாவட்ட காவல்துறை இரவு ரோந்து விபரம்

தருமபுரி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (ஆக.31) இரவு ரோந்து செல்லும் காவலர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. தலைமை அதிகாரியாக
J. ராஜ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். தருமபுரி புஷ்பராணி, அரூர் ஆதம், பென்னாகரம் முரளி மற்றும் பாலக்கோடு வெங்கட்ராமன் ஆகியோர் பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் பொதுமக்கள் தொடர்பு கொள்வதற்கு தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதை அனைவருக்கும் ஷேர் செய்க!
Similar News
News September 3, 2025
தர்மபுரி ஊடக வளர்ச்சி காலிப் பணியிடங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறையில் 70 ஜீப் ஓட்டுநர் 33 பதிவுத்துறை எழுத்தர் 151 அலுவலக உதவியாளர் 83 இரவு காவலர் உட்பட 300க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள காலி பணியிடங்களுக்கு www.trd.tn.gov.in. என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
News September 3, 2025
தருமபுரி மக்களே உங்க போன்ல இந்த நம்பர் இருக்கா?

ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். *தெரிந்தவர்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க*
News September 3, 2025
தர்மபுரி மாவட்டம் – செப்டம்பர் மாத மின்தடை அறிவிப்பு

தர்மபுரி மாவட்டத்தில் மின் வாரியத்தின் பராமரிப்பு மற்றும் மேம்பாட்டு பணிகள் நடைபெறவுள்ளதால், செப்டம்பர்-2025 மாதம் முழுவதும் திட்டமிட்ட நாள்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை அமல்படுத்தப்படும். மாவட்டத்தின் பல ஊரக, நகர்புற பகுதிகள் மின்தடைக்கு உட்படுகின்றன. பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளைச் செய்து கொள்ளுமாறு மின்வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.