News January 10, 2026

தருமபுரி மாவட்ட காவல்துறையின் இரவு ரோந்து விபரம்!

image

தருமபுரி மாவட்டம் முழுவதும் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு (ஜனவரி-9) இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மாவட்ட காவல் துறையால் வெளியிடப்பட்டுள்ளது. ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மற்றும் தொடர்புக்கொள்ள தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 100 அல்லது 04342-233850 உதவி எண்ணை தொடர்பு கொள்ளவும். இதை அனைவருக்கும் ஷேர் செய்யவும்!

Similar News

News January 27, 2026

தருமபுரி: தறிகெட்டு ஓடிய பைக்; பறிபோன உயிர்!

image

திருவண்ணாமலையை சேர்ந்த தொழிலாளி மணிகண்டன் (26). இவர், தருமபுரி, கல்லாடிப்பட்டியில் தங்கி வேலை செய்து வந்தார். இந்நிலையில் மணிகண்டன் பைக் ஓட்ட ரமேஷ் பின்னால் அமர்ந்து லிங்காபுரம் நோக்கி சென்றனர். இதில் கட்டுப்பாட்டை இழந்த பைக் சாலையோர மரத்தில் மோதியது. இதில் படுகாயம் அடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து அரூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 27, 2026

தருமபுரி: Insta காதலால் சிறுமி கர்ப்பம்!

image

சேலத்தை சேர்ந்த +1 படித்து வந்த மாணவிக்கும் தருமபுரி மாவட்டம், பத்திரெட்டிஅள்ளியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் நந்தகுமாருக்கும் (28) Instagram மூலம் காதல் மலர்ந்தது. கடந்த ஜூன் 8-ந் தேதி நந்தகுமார் மாணவியை திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து தற்போது சிறுமி 5 மாத கர்ப்பமாக உள்ளார். இதையடுத்து நந்தகுமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News January 27, 2026

தருமபுரி: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்!

image

தருமபுரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், நேற்று ஜன.26 இரவு முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆய்வாளர் ராஜசுந்தர் தலைமையில், அதியமான்கோட்டை பகுதியில் நாகராஜன் , தொப்பூரில் ராமகிருஷ்ணன் , மதிகோன்பாளையத்தில் சிவகுமார் ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். மேலும், பொதுமக்கள் அவசர உதவிக்கு இவர்களை அணுகலாம். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!