News December 23, 2025
தருமபுரி: மலிவு விலையில் கார் வேண்டுமா..?

தருமபுரி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு, உதவி செயற்பொறியாளரின் பயன்பாட்டில் இருந்த ஈப்பு TN 09 G 1289 முதிர்ந்த நிலையில் கழிவு நீக்கம் செய்யப்பட்டுள்ளது. கழிவு செய்யப்பட்ட வாகனத்திற்கு வரும் டிச.29ஆம் தேதி அன்று முற்பகல் 11 மணியளவில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏலம் நடைபெறுகிறது. ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் கலந்து கொண்டு விலைப்புள்ளியை கோரலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 30, 2025
தருமபுரியில் விலை உயர்வு!

தருமபுரி உழவர்சந்தைக்கு கடந்த சில வாரங்களாக முருங்கைக்காய் வரத்து குறைந்ததால் அதன் விலை அதிகரித்தது. பின்னர் வரத்து அதிகரித்ததால் விலை குறைந்தது. இந்த நிலையில் சந்தைக்கு வரத்து மீண்டும் குறைந்ததால் நேற்று முருங்கைக்காய் விலை கிலோவுக்கு ரூ.10 அதிகரித்தது. தருமபுரி உழவர் சந்தையில் நேற்று ஒரு கிலோ ரூ.160-க்கு விற்பனை செய்யப்பட்டது. தனியாக ஒரு முருங்கைக்காய் ரூ.10-க்கு விற்பனை செய்யப்பட்டது.
News December 30, 2025
தருமபுரி குறிஞ்சி கூட்டரங்கில் உணவு பாதுகாப்பு ஆலோசனை!

தருமபுரி ஆட்சியர் அலுவலக குறிஞ்சி கூட்டரங்கில் இன்று(டிச.29) மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை சார்பில் மாவட்ட அளவிலான உணவு பாதுகாப்பு ஆலோசனைக் குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் P.K.கைலாஷ் குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் மற்றும் துறை அலுவலர்கள் பங்கு பெற்றனர். பின், உணவு தரத்தை மேம்படுத்த கலந்துரையாடினர்.
News December 30, 2025
தருமபுரி குறிஞ்சி கூட்டரங்கில் உணவு பாதுகாப்பு ஆலோசனை!

தருமபுரி ஆட்சியர் அலுவலக குறிஞ்சி கூட்டரங்கில் இன்று(டிச.29) மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை சார்பில் மாவட்ட அளவிலான உணவு பாதுகாப்பு ஆலோசனைக் குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் P.K.கைலாஷ் குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் மற்றும் துறை அலுவலர்கள் பங்கு பெற்றனர். பின், உணவு தரத்தை மேம்படுத்த கலந்துரையாடினர்.


