News January 13, 2026
தருமபுரி: நடத்துனர் மீது கொலைவெறி தாக்குதல்!

நல்லகுட்லஅள்ளியை சேர்ந்த பஸ் கண்டக்டர் அகிலரசன் (30). இவர் நேற்று முன்தினம் பஸ்சில் பயணித்த வினோத்குமாரிடம் (35) டிக்கெட் எடுக்கும்படி கூறினார். அதற்கு வினோத்குமார் “என்னிடமே டிக்கெட் கேட்கிறாயா?” என தகராறில் ஈடுபட்டார். பின் வினோத் பஸ் நிற்கும் போது கீழே கிடந்த கட்டையால் அகிலரசனை சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இதையடுத்து பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் வினோத்குமாரை கைது செய்தனர்.
Similar News
News January 25, 2026
தருமபுரி: தொழிலாளி மரணம்; தொடரும் மர்மம்!

தருமபுரி அடுத்த பாப்பாரப்பட்டியில் ஒரு தோட்டத்தில் கிருஷ்ணகிரியை சேர்ந்த மரம் ஏறும் தொழிலாளி வேலாயுதம் (40) வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று அங்குள்ள கரும்பு அரவை கூடத்தில் தூங்க சென்ற வேலாயுதம் நீண்ட நேரம் ஆகியும் எழும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் வந்து பார்த்த போது அவர் இறந்தது தெரியவந்தது. இந்த மர்ம மரணம் குறித்து பாப்பாரப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 25, 2026
தருமபுரி: துக்க வீட்டிற்கு சென்றவர் பலி!

மொரப்பூர் அருகே பொம்பட்டியை சேர்ந்த இன்ஜினீயர் மதன்குமார் (25). பெங்களூருவில் பணிபுரிந்து வந்த இவர், துக்க வீட்டிலிருந்து பசுவாபுரம் வழியாக மொரப்பூர் நோக்கி வந்தார். அப்போது அம்பாளப்பட்டி அருகே வேகத்தடையில் நிலைதடுமாறி பைங்கில் இருந்து கீழே விழுந்தார். கோவை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து மொரப்பூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்,
News January 25, 2026
தருமபுரி: இரவு ரோந்து ஆய்வாளர்கள் விவரம்!

தருமபுரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், நேற்று (ஜன.24) இரவு முதல் இன்று காலை 6 மணி வரை ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆய்வாளர் குணவராமன் தலைமையில், அதியமான்கோட்டை பகுதியில் சிவபெருமான், தொப்பூரில் பிரபாகரன் , மதிகோன்பாளையத்தில் இளமதி ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். மேலும், பொதுமக்கள் அவசர உதவிக்கு இவர்களை அணுகலாம். ஷேர்!


