News October 13, 2025
தருமபுரி: தேர்வு மையங்களில் கலெக்டர் ஆய்வு

தருமபுரி மாவட்டத்தில், 43 தேர்வு மையங்களில், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வு நேற்று நடைபெற்றது. அதையொட்டி, நேற்று காலை 11 மணியளவில் அதியமான்கோட்டை அறிஞர் அண்ணா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, இலக்கியம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய தேர்வு மையங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார்.
Similar News
News November 12, 2025
மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி கலெக்டர் துவக்கம்!

தருமபுரி நகர பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் மழைநீர் சேகரிப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வுப் பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் சதீஸ் இன்று (நவ.12) கொடியசைத்து துவக்கி வைத்தார். உடன் தருமபுரி நகர மன்ற தலைவர் லட்சுமி நாட்டான் மாது, அரசுத் துறை அலுவலர்கள் பள்ளி மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
News November 12, 2025
தருமபுரி: தேர்வு, நேர்காணல் இல்லாமல் மத்திய அரசு வேலை!

India Post Payments Bank-ல் ஜூனியர் ஆசோசியட், அசிஸ்டண்ட் மேனேஜர் உள்ளிட்ட பதவிகளில் மொத்தம் 309 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு, பட்டப்படிப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கு 20 முதல் 35 வயதுடையவர்கள், <
News November 12, 2025
தருமபுரியில் இலவச காளான் வளர்ப்பு பயிற்சி!

தருமபுரி மாவட்டத்தில் 8ம் வகுப்பு கீழ் படித்தவர்களுக்கு இலவச காளான் வளர்ப்பு பயிற்சி வழங்கபட உள்ளது. தமிழ்நாடு திறன் வளர்ப்பு பயிற்சி மற்றும் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் காளான் வளர்ப்பு பயிற்சி தருமபுரி மாவட்டத்தில் வழங்கப்பட உள்ளது. விருப்பம் உள்ளவர்கள் கீழே உள்ள இணைப்பின் மூலம் விண்ணப்பிக்கலாம் https://candidate.tnskill.tn.gov.in/skillwallet/course/1738 . ஷேர் பண்ணுங்க!


