News February 15, 2026
தருமபுரி: தேர்வு கிடையாது… போஸ்ட் ஆபீஸ் வேலை!

தருமபுரி மக்களே.., தமிழ்நாடு அஞ்சல் துறையில் காலியாக உள்ள 2019 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10ஆவது படித்திருந்தாலே போதுமானது. எந்தத் தேர்வும் எழுத அவசியமில்லை. மாதம் ரூ.29,380 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க நாளை(பிப்.16) கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் இங்கே <
Similar News
News February 20, 2026
தருமபுரியில் அரங்கேறிய கொடூரம்; அதிரடி தீர்ப்பு!

தருமபுரியை சேர்ந்த பாபு (32) கடந்த 2024-ல் 11 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதையடுத்து சிறுமி கர்ப்பமானார். இதுகுறித்து தகவலிருந்த தருமபுரி போலீசார் பாபுவை போக்சோ வழக்கின் கீழ் கைது செய்தனர். தொடர்ந்து தருமபுரி போக்சோ கோர்ட்டில் நடந்த விசாரணையில் பாபுவிற்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் ரூ.70 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி அசின் பானு தீர்ப்பளித்தார்.
News February 20, 2026
தருமபுரியில் மின் தடை; உங்க எரிய இருக்கா?

தருமபுரி, பாப்பிரெட்டிபட்டி மற்றும் தருமபுரி துணை மின் நிலையங்களில் நாளை (பிப்.21) பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால் காலை 9 மணி-மாலை 5 மணி மின் தடை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன்படி மதிகோன்பாளையம், கோட்டை, தருமபுரி பேருந்து நிலையம் கடைவீதி, அன்னசாகரம், விருபாட்சிபுரம், கடகத்தூர், கொளகத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதியில் நாளை மின்தடை செய்யப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. SHARE IT!
News February 20, 2026
தருமபுரி தறிகெட்டு ஓடிய பைக்; பிரிந்த உயிர்!

காரிமங்கலம் அருகே கோவிலூர் பகுதியை சேர்ந்த பிரபு (41) நேற்று (பிப். 19) பைக்கில் வேகமாக சென்று கொண்டு இருந்தார். அப்போது பெரியாம்பட்டி தனியார் கல்லூரி அருகே வேகத்தடை மீது செல்கையில் தவறி கீழே விழுந்தார். பின்னர் அவரை சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில் அங்கு அவர் உயிரிழந்தார். இது குறித்து காரிமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


