News March 22, 2024
தருமபுரி: தேர்தலை புறக்கணிப்பதாக அறிவிப்பு!

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம், வட்டுவனஹள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட காந்திநகர் பகுதி மக்கள், மக்களவை தேர்தலை புறக்கணிப்பதாக கூறி பேனர் வைத்து இன்று(மார்ச் 22) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பட்டா கோரி பலமுறை வட்டாட்சியர் அலுவலகத்தில் முறையிட்டு மனு கொடுத்தும், இதுவரை தங்களுக்கு பட்டா கிடைக்கவில்லை என தெரிவிக்கும் இம்மக்கள் உரிய நடவடிக்கை எடுக்கும் வரை தேர்தலை புறக்கணிப்பதாக கூறுகின்றனர்.
Similar News
News August 14, 2025
மகளிருக்கான இலவச ஆரி எம்ப்ராய்டரி பயிற்சி

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள இந்தியன் வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில், வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள கிராமப்புறப் பெண்களுக்கு, வருகிற ஆகஸ்ட் 18 முதல் 30 நாட்களுக்கு இலவச ஆரி எம்ப்ராய்டரி பயிற்சி தொடங்கவுள்ளது. இந்தப் பயிற்சியில் உணவு மற்றும் அனைத்துப் பொருட்களும் இலவசமாக வழங்கப்படும்.மேலும் தகவல்களுக்கு இந்தியன் வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனத்தை அணுகலாம்.
News August 14, 2025
தருமபுரி: B.Sc, B.C.A, M.Sc படித்தவர்களுக்கு அரசு வேலை

சென்னை உயர்நீதிமன்றத்தில் தொழில்நுட்ப பிரிவில் உள்ள 41 உதவி புரோகிராமர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு B.Sc, BCA, MCA, M.Sc படித்த 18 வயது முதல் 37 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.35,900-1,31,500 வரை வழங்கப்படும். இப்பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு நடத்தப்படும். விருப்பமுள்ளவர்கள் இந்த <
News August 14, 2025
தருமபுரியில் பெண்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்

தர்மபுரி மாவட்டத்தில் நாளை (ஆகஸ்ட் 15) பெண்களுக்கான மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஷ்வரன் தலைமையில், மாவட்ட சட்டமன்ற உறுப்பினர் அலுவலக வளாகத்தில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த முகாம் நடக்கிறது. 12-ஆம் வகுப்பு, டிப்ளமோ, பட்டப்படிப்பு முடித்த வேலைவாய்ப்பற்ற பெண்கள் கலந்துகொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 6374968624 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.