News December 31, 2025
தருமபுரி: தேங்காய் பறிக்க சென்றவர் பரிதாப பலி!

தருமபுரி: பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள மோளையானூரை சேர்ந்தவர் சிவராஜ் (65). மரம் ஏறும் தொழிலாளியான இவர், கோழிமேக்கனூர் பிரதீப் என்பவரின் தோட்டத்திற்கு தேங்காய் பறிக்க சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக கால் தவறி மரத்தில் இருந்து கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News January 20, 2026
தருமபுரி: House Owner தொல்லையா? உடனே CALL

தருமபுரியில் வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பணம் இழுபறி போன்ற பல பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. வாடகைக்கு இருக்கும் வீட்டில் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். SHARE IT!
News January 20, 2026
தருமபுரியில் அதிரடி ஆய்வு!

தருமபுரி உணவு பாதுகாப்பு துறை சார்பில் நேற்று (ஜன.19) மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு நடத்தப்பட்டது. நேற்று இரவு மாவட்ட நியமன அலுவலர் கைலாஷ்குமார், தருமபுரி நகராட்சி மற்றும் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் மற்றும் நகராட்சி நகர் நல அலுவலர் லட்சியவர்ணா உள்ளிட்ட குழுவினர் ராஜகோபால் பூங்கா அருகே உள்ள தள்ளுவண்டி மற்றும் துரித உணவு கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
News January 20, 2026
தருமபுரி: உங்கள் ரேஷன் அட்டை ரத்தாக வாய்ப்பு!

ரேஷன் அட்டையில் உள்ள உறுப்பினர்கள் e-KYC அப்டேட் செய்யாவிட்டால், அந்த குறிப்பிட்ட உறுப்பினரின் பெயர் நீக்கப்படவோ அல்லது ரேஷன் அட்டை முடக்கப்படவோ வாய்ப்புள்ளது. போலி அட்டைகளைத் தவிர்க்க, உண்மையான பயனாளிகளைக் கண்டறிய உங்கள் ரேஷன் கடைக்கு நேரடியாக சென்று கைரேகை வைத்து அப்டேட் செய்யவேண்டும். இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் அரசு உதவி எண் 1800 425 5901-ஐ அழைக்கலாம். உடனே இந்த தகவலை ஷேர் பண்ணுங்க.


