News January 25, 2026
தருமபுரி: துக்க வீட்டிற்கு சென்றவர் பலி!

மொரப்பூர் அருகே பொம்பட்டியை சேர்ந்த இன்ஜினீயர் மதன்குமார் (25). பெங்களூருவில் பணிபுரிந்து வந்த இவர், துக்க வீட்டிலிருந்து பசுவாபுரம் வழியாக மொரப்பூர் நோக்கி வந்தார். அப்போது அம்பாளப்பட்டி அருகே வேகத்தடையில் நிலைதடுமாறி பைங்கில் இருந்து கீழே விழுந்தார். கோவை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து மொரப்பூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்,
Similar News
News February 4, 2026
தருமபுரி: கிணற்றில் மிதந்த சடலம்!

சூடனூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி மாதப்பன். இவரது கிணற்றில் நேற்று முன்தினம் (பிப்.2) பெண் பிணம் மிதந்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பெண்ணின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். இதில் அவர் அதேபகுதியை சேர்ந்த பச்சியம்மாள் (86) என்பதும், கிணற்றில் தவறி விழுந்து இறந்ததும் தெரியவந்தது. இதையடுத்து உடல் பிரேத பரிசோதனைக்காக பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
News February 4, 2026
தர்மபுரி : இரவு ரோந்து பணி காவல் ஆய்வாளர்கள் விவரம்

தருமபுரி மாவட்டத்தில் இன்று (பிப்- 3) இரவு முதல் நாளை (பிப்- 4) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!
News February 4, 2026
தருமபுரி நகராட்சி புதிய பேருந்து நிலையத்தினை ஆட்சியர் சதீஷ் ஆய்வு

தருமபுரி நகராட்சி புதிய பேருந்து நிலையத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட உள்ளது. அதை தொடர்ந்து, முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆட்சியர் ரெ.சதீஸ், இன்று (பிப்.3) மாலை 4 மணி அளவில் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். உடன் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் .சி.க.ஜெயதேவ்ராஜ், நகராட்சி ஆணையாளர் சேகர், அதிகாரிகள் உடன் இருந்தனர்.


