News October 31, 2025

தருமபுரி: சீட்டு கட்டி ஏமாந்தால் என்ன செய்வது?

image

சீட்டு நடத்துபவர்கள் ஏமாற்றினால் உடனே அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளியுங்கள். மாவட்ட ஆட்சியரிடம் ஏமாற்றப்பட்டது குறித்து மனுவாக அளிக்கலாம். சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க வழக்கறிஞரை அணுகுவது நல்லது. புகாரில், சீட்டு கட்டிய விவரங்கள், ஏமாற்றப்பட்ட விதம், எவ்வளவு பணம் இழந்தீர்கள் போன்ற விவரங்களை தெளிவாக குறிப்பிடவும். அதற்கான ஆதாரமாக வைத்துக்கொள்ளவும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

Similar News

News October 31, 2025

தருமபுரி: அசையும் சொத்துக்கள் பொது ஏலம்

image

தருமபுரியில் PVT Ltd நிறுவனத்திற்குச் சொந்தமான அசையும் சொத்து, தருமபுரி தகுதி பெற்ற அலுவலர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர்களால் வருகின்றன நவ.12 அன்று முற்பகல் 11.00 மணியளவில், தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள, முல்லை கூட்டரங்கில் பொது ஏலம் விடப்பட உள்ளது. ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் மற்றும் அனைவரும் இந்த ஏலத்தில் கலந்து கொள்ளலாம். என ஆட்சியர் சதிஸ் தெரிவித்தார்.

News October 31, 2025

தருமபுரி: தீராத பிணி தீர்க்கும் தீர்த்தமலை கோவில்

image

தருமபுரியின் பழைமையான கோயில்களுள் ஒன்று “தீர்த்த மலை தீர்த்தகிரிசுவரர் கோயில்”. இக்கோயிலை பற்றி கி.பி 16 ஆம் நூற்றாண்டில் சைவ எல்லப்ப நாவலர் தீர்த்தகிரிப் புராணத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் சாமியை உள்ளார்ந்து வேண்டினால் நோய் தீர்க்கும் சக்திகோக்கண்டது என கூறுவார். பின் ராம தீர்த்தம், அகத்திய தீர்த்தம், அக்கினி தீர்த்தம், குமார தீர்த்தம், கௌரி தீர்த்தம் ஆகிய 5 தீர்த்தங்கள் இதன் சிறப்பம்சமாகும்.

News October 31, 2025

தருமபுரி: கேன் வாட்டர் குடிப்போர் கவனத்திற்கு

image

தருமபுரி மாவட்டத்தில் தற்போது மழை பெய்து வருவதால் கேன் தண்ணீர் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை. குடிநீர் கேன்களில், பிளாஸ்டிக் தரம், கேன்களின் சுத்தம், உற்பத்தி மற்றும் காலாவதி தேதி, BIS மற்றும் FSSAI முத்திரைகள் ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும். ஒரு கேனை 30 முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கேன்களின் நிறம் மாறினால் பயன்படுத்த கூடாது. இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!