News January 29, 2026

தருமபுரி: கோயில் குளத்தில் சடலம்!

image

முரசப்பட்டி முருகர் கோயில் திருமண விழாவில் பங்கேற்க பென்னாகரம் பகுதியை சேர்ந்த கோபால், அவரது மனைவி மற்றும் 2 மகன்களுடன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இதில் அவரது மகன் பிரதீப்பை (7) காணாததை அடுத்து பாலக்கோடு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் தீயணைப்பு துறையினர் கோயில் குளத்தில் இருந்த சிறுவன் உடலை மீட்டனர். இது குறித்து காரிமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News February 1, 2026

தருமபுரி போலீசாரின் மின்னல் வேக வேட்டை – இருவர் கைது!

image

தருமபுரி மாவட்டம், பாளையம் அருகே கோம்பை கிராமத்தில், நேற்று (ஜன.31) சட்டவிரோதமாக மது விற்பனை செய்த வேலுசாமி, சிந்தாமணி ஆகியோரை மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 28 மது பாட்டில்கள் மற்றும் ஒரு இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டன. ரகசியத் தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட இந்த அதிரடி சோதனையால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

News February 1, 2026

தருமபுரி: பள்ளியில் வெடித்த வன்முறை – மாணவனுக்கு தர்மஅடி!

image

தருமபுரி இலக்கியம்பட்டி அரசுப் பள்ளியில் நேற்று (ஜன.31) தேர்வு எழுத வந்த மிட்டாநூல் அள்ளி பள்ளி மாணவர்களை, உள்ளூர் மாணவர்கள் கிண்டல் செய்தனர். இதனைத் தட்டிக்கேட்ட பிரபாகரன் என்ற மாணவன் சரமாரியாகத் தாக்கப்பட்டதில் கை எலும்பு முறிந்தது. காயமடைந்த மாணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனப் பெற்றோர்கள் கண்ணீர் மல்கக் கோரிக்கை.

News February 1, 2026

தருமபுரி: இரவு ரோந்துப் பணி ஆய்வாளர்கள் விவரம்

image

தருமபுரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று (ஜன.31) இரவு முதல் இன்று காலை 6 மணி வரை ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆய்வாளர் ராஜ்குமார் தலைமையில், அதியமான்கோட்டை பகுதியில் பச்சமுத்து தொப்பூரில் பிரபாகரன் , மதிகோன்பாளையத்தில் சிவகுமார் ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். மேலும், பொதுமக்கள் அவசர உதவிக்கு இவர்களை அணுகலாம். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!