News December 30, 2025
தருமபுரி குறிஞ்சி கூட்டரங்கில் உணவு பாதுகாப்பு ஆலோசனை!

தருமபுரி ஆட்சியர் அலுவலக குறிஞ்சி கூட்டரங்கில் இன்று(டிச.29) மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை சார்பில் மாவட்ட அளவிலான உணவு பாதுகாப்பு ஆலோசனைக் குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் P.K.கைலாஷ் குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் மற்றும் துறை அலுவலர்கள் பங்கு பெற்றனர். பின், உணவு தரத்தை மேம்படுத்த கலந்துரையாடினர்.
Similar News
News February 2, 2026
தருமபுரி: கடைக்காரர் மாற்ற மறுக்கிறாரா?

தருமபுரி மக்களே.. கடைகளில் வாங்கிய பொருளை கடை உரிமையாளர் மாற்றித் தர மறுத்தாலோ, பணத்தை திருப்பித்தர மறுத்தாலோ கவலை வேண்டாம். வாங்கிய பொருளை 15 நாட்களுக்குள் சேதாரமின்றி இருந்தால் மாற்றவும், பணத்தை திரும்ப பெறவும் உங்களுக்கு உரிமை உண்டு. கள்ளக்குறிச்சி மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரை 04343234677 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளித்தால் உடனே தீர்வு கிடைக்கும். ஷேர் பண்ணுங்க!
News February 2, 2026
தருமபுரி: திடீர்னு பெட்ரோல் காலியா? இதை பண்ணுங்க!

தருமபுரி மக்களே, திடீரென உங்கள் வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை எனலாம். இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வு வழங்கியுள்ளது. அந்நிறுவனத்தின் <
News February 2, 2026
தருமபுரி: மதுபோதையில் அட்டூழியம்; போலீசார் அதிரடி!

பாலக்கோடு புதூர் மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (44). இவர் மதுபோதையில் அந்த பகுதியில் பொதுமக்களிடம் ரகளை செய்துள்ளார். இதேபோல எலங்காலப்பட்டியை சேர்ந்த ராமர் (60) என்பவரும் பொது மக்களிடம் ரகளையில் ஈடுபட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த பாலக்கோடு போலீசார் விரைந்து சென்று பொதுமக்களை தொந்தரவு செய்த 2 பேரையும் கைது செய்தனர்.


