News December 4, 2025

தருமபுரி: குடி பழக்கத்தால் நேர்ந்த விபரீதம்!

image

தருமபுரி மாவட்டம் நீலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த கட்டிட மேஸ்திரி கிருஷ்ணன் (43), மதுப் பழக்கத்தால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மனமுடைந்த அவர், நேற்று முன்தினம் வீட்டில் தனியறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கதவை உடைத்து பார்த்தபோது அவர் உயிரிழந்தது தெரியவந்தது. இந்தச் சம்பவம் குறித்து தர்மபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News December 4, 2025

தருமபுரி: உங்கள் வீட்டில் பெண் குழந்தை உள்ளதா?

image

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் அல்லது மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகியோ விண்ணப்பிக்கலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News December 4, 2025

தருமபுரி: ஆடு, மாடு வளர்க்க ரூ.50 லட்சம் வரை மானியம்!

image

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு உத்யமி மித்ரா திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் <>இங்கு கிளிக்<<>> செய்து அதற்கான தகுதிகளை அறிந்துகொண்டு விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

News December 4, 2025

தருமபுரி: மின்சாரம் தாக்கி 2 பேர் சம்பவ இடத்திலேயே பலி!

image

தருமபுரி மாவட்டம், இண்டூர் அருகே தாளப்பள்ளத்தில் உள்ள காகித ஆலையின் திறப்பு விழாவில் சுவிட்ச் பெட்டிக்கு அலங்காரம் செய்தபோது பாஞ்சாலை (52) மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். மேலும், மாரண்டஅள்ளி அருகே மோட்டார் சுவிட்சை இயக்க முயன்றபோது நாராயணன் (37) என்பவரும் மின்சாரம் தாக்கி பலியானார். இந்த இரு சம்பவங்கள் குறித்தும் தனித்தனியாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!