News January 3, 2026
தருமபுரி: காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த காதல் ஜோடி!

காரிமங்கலம் அடுத்த மாட்லாம்பட்டியை சேர்ந்த ஹரிணியும் (19) மற்றும் அதே பகுதியை சேர்ந்த இவரது உறவினர் கோகுலும் (21) கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்நிலையில் ஹரிணியின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்கவே, கடந்த 30-ஆம் தேதி இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் பாதுகாப்பு கேட்டு நேற்று (ஜன.2) காதல் ஜோடி அரூர் போலீசில் தஞ்சமடைந்தனர்
Similar News
News February 1, 2026
தருமபுரி: கணவன் அடித்தால் உடனே CALL!

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதுபடி, தருமபுரி பெண்களுக்கு ஏதேனும் குடும்ப வன்முறை நேர்ந்தால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலர் எண்ணான 9600941391-ஐ அழைத்து புகார் அளிக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News February 1, 2026
தருமபுரி: VAO லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

நில வரி வசூலிப்பது, பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது, வங்கிகள், கூட்டுறவு சங்கங்களிடமிருந்து பொதுமக்களுக்கு கடன் வாங்கி கொடுப்பது ஆகியவை VAO-வின் வேலை ஆகும். இவற்றை முறையாக செய்யவில்லை என்றாலும், லஞ்சம் கேட்டாலும் இந்த நம்பரில் (04342-260042) புகார் அளிக்கலாம். ஷேர் செய்யுங்க.
News February 1, 2026
தருமபுரி: whatsapp-ல் சட்ட ஆலோசனை பெறுவது எப்படி?

தருமபுரி மக்களே, மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் பொதுமக்களுக்கு இலவச சட்ட ஆலோசனை வழங்குகிறது. இந்த எண்ணுக்கு 72177 11814 போனில் இருந்து மெசேஜ் அனுப்பினால் போதும். உங்கள் (சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, சிவில் வழக்கு) போன்றவைகளுக்கு இலவசமாக சட்ட ஆலோசனை பெறலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க!


