News March 19, 2024
தருமபுரி கலெக்டர் உத்தரவு

தருமபுரி மாவட்டத்தில் இன்று 18 அனைத்து படைக்கல உரிமைதாரர்களும், படைக்கலன்களை அவர்களுடைய இருப்பிடத்திற்கு அருகாமையில் உள்ள காவல் நிலையத்தில் பாதுகாப்பாக ஒப்படைத்து உரிய ஒப்புதல் சீட்டு பெற்றுக் கொள்ளவேண்டும். தேர்தல் நடத்தை விதிகள் முடிவுபெறும் தினத்திலிருந்து ஒரு வாரத்திற்கு பின்னர் தங்களது பொறுப்பில் திரும்ப பெற்றுக் கொள்ளுமாறு மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் தெரிவித்துள்ளார்.
Similar News
News August 7, 2025
தர்மபுரி: பட்டா சிட்டா விபரங்களை அறிய வேண்டுமா?

தர்மபுரி மக்களே, உங்களது நிலம் தொடர்பான ஆவணங்கள் குறித்து எளிதில் eservices.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் இதன் மூலம் தங்களது நில விவரம், பட்டா, சிட்டா திருத்தம் போன்ற சேவைகளை மேற்கொள்ளலாம் (அல்லது) அருகில் உள்ள இ-சேவை மையங்கள் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.
News August 7, 2025
மினி சரக்கு வாகனம் மோதி ஒருவர் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே உள்ள கம்மாளப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளி வையாபுரி (வயது.37) இவர் இன்று உறவினர் வீட்டுக்கு செல்ல மொபெட் வாகனத்தில் பாப்பாரப்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தார். தொட்லாம்பட்டி பெருமாள் கோயில் அருகே சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த மினி சரக்கு வாகனம் மோதியதில் வையாபுரி தலை நசுங்கி சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிர் இழந்தார்.
News August 7, 2025
தருமபுரி ஆரம்ப சுகாதார மையங்களில் வேலை வாய்ப்பு

தருமபுரி மாவட்ட ஆரம்ப சுகாதார மையங்களில் காலியாக உள்ள பாரா மெடிக்கல் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியானது. இதன் மூலம் மருத்துவ உதவியாளர், டிரைவர், லேப் டெக்னீஷியன், ஸ்டாப் நர்ஸ் உட்பட 103 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான விண்ணப்பத்தை <