News November 19, 2025
தருமபுரி: கஞ்சா ஆசாமிகளை போலீசார் வலைவீசி பிடிப்பு!

தருமபுரி மாவட்டம், அரூர் சுடுகாடு அருகே நேற்று (நவ.19) போலீ சார் ரோந்து பணியில் ஈடு பட்டனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஒருவர் போலீசாரை பார்த்ததும் ஓட முயன்றார். அவரை போலீசார் துரத்தி பிடித்தனர். பின்னர், விசாரணையில் அவர் அரூரை சேர்ந்த தீப்பொறி (வயது 30) என்பதும், அவர் 500 கிராம் கஞ்சாவை பதுக்கி வைத்திருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து அவரை அரூர் போலீசார் கைது செய்தனர்.
Similar News
News November 21, 2025
தருமபுரி: 10th தகுதி.. எய்ம்ஸ்-ல் வேலை ரெடி! APPLY NOW!

தருமபுரி மக்களே, எய்ம்ஸ் (AIIMS) மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் பல்வேறு பணிகளுக்கு 1383 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18-40 வயதிற்கு உட்பட்ட 10, 12, டிப்ளமோ, டிகிரி, B.E., முடித்தவர்கள் டிச.2-க்குள் இங்கு <
News November 21, 2025
தர்மபுரி: ரூ.300க்கு கொலை ; குற்றவாளிக்கு ஆயுள் !

தர்மபுரி: சோமனஅள்ளி, மல்லாபுரம் பகுதி சிக்கன் கடையில் கடந்த 2021ஆம் ஆண்டு 300 ரூபாயை காணவில்லை என்பதால் அங்கிருந்த சுந்தரம் அண்ணாதுரையின் இடது பக்க விலாவில் குத்திவிட்டார். இதில் அண்ணாதுரை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதில் சுந்தரத்தை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி மோனிகா( நவ.21) ஆயுள் தண்டணை மற்றும் ரூபாய் 5000-/- அபராதம் விதித்தனர்.
News November 21, 2025
தர்மபுரி: பிஸ்னஸ் செய்ய அரிய வாய்ப்பு!

தருமபுரி இன்டஸ்ட்ரியல் ஸ்டார்ட் அப் எக்ஸ்போ – 2025 திருவிழா புதிய கலெக்டர் ஆபீஸ் அதியமான் மஹாலில் நவம்பர் 21, நவம்பர் 22, இரண்டு தினங்கள் நடைபெறுகிறது. இந்தத் திருவிழாவில் சமூக ஆர்வலர்கள், தொழில் முனைவோர்கள் விவசாயிகள் பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.


