News February 13, 2025
தருமபுரி எழுத்தாளருக்கு முதல் பரிசு

தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த எழுத்தாளர் தகடூர் அ. மணிவண்ணன், பல்வேறு கவிதைகள் மற்றும் புத்தகங்களை எழுதியுள்ளார். இவர் எழுதிய அந்த மூன்று நாட்கள் எனும் புத்தகம் புதுச்சேரி படைப்பாளர் இயக்கம் நடத்திய நெடுங்கதை போட்டியில் முதல் பரிசை பெற்றுள்ளது. பல்வேறு எழுத்தாளர்கள் இவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
Similar News
News September 22, 2025
தருமபுரி: பெண்களுக்கு செம்ம வாய்ப்பு – வங்கி கடன் திட்டம்!

தருமபுரி மாவட்ட பெண்களே.., பிஸ்னஸ் செய்ய ஆசை உள்ளவர்களா நீங்கள்? உங்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் எந்த ஒரு பிணையமும் இன்றி ரூ.1 லட்சம் முதல் கடன் ‘சென்ட் கல்யாணி’ திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது. உங்கள் தொழிலுக்கான 80 சதவீத கடனை வங்கியே வழங்கும். இது குறித்து விண்ணப்பிக்க, விவரங்கள் அரிய அருகே உள்ள செண்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா அலுவலகத்தை அணுகவும். உடனே இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News September 22, 2025
தருமபுரி பெண்களின் பாதுகாப்பு எண்கள்

வீடு, அலுவலகம், பொது இடம் என அனைத்து இடங்களிலும் பெண்கள் & குழந்தைகளின் பாதுகாப்பு கேள்வி குறியாகவே உள்ளது. எனவே, பெண் மீதான வன்கொடுமை-181, ராகிங்-155222, பெண்கள் & குழந்தைகள் மிஸ்ஸிங்-1094, குழந்தைகள் பாதுகாப்பு-1098, மனஉளைச்சல் -9911599100, தேசிய பெண்கள் ஆணையம்-01126944754, 26942369, தமிழ்நாடு பெண்கள் ஆணையம்-044 28592750 என்ற எண்களை சேவ் பண்ணுவது அவசியமானதாகும். தெரிந்த பெண்களுக்கு பகிரவும்.
News September 22, 2025
தருமபுரி: 10th Fail ஆனாலும் பட்டய படிப்பு படிக்கலாம்!

தருமபுரி பாப்பாரப்பட்டி வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட இயக்குனரின் அறிவிப்பின்படி. 2025 – 26 ஆம் கல்வியாண்டிற்கான ஓராண்டு வேளாண் இடுபொருள் பட்டய படிப்பு சனி மற்றும் ஞாயிறு தினங்களில் நடத்தப்பட உள்ளது. வயது வரம்பு 18 வயது பூர்த்தி அடைந்த பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வியடைந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 9677565220 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.