News January 1, 2026

தருமபுரி: எமனாய் மாறிய நாய்- முதியவர் பரிதாப பலி!

image

கம்பைநல்லூர் அருகே எலவடையைச் சேர்ந்த விவசாயி மோகன் (52), மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அம்மாபேட்டை பிரிவு ரோடு அருகே திடீரென நாய் குறுக்கே வந்ததால், நிலைதடுமாறி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த போலீசார், உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News January 2, 2026

தருமபுரி: பைக்கில் சென்றவருக்கு ஏற்பட்ட சோகம்!

image

தருமபுரி, கம்பைநல்லூர் அடுத்த எலவடை பகுதியைச் சேர்ந்தவர் மோகன் (52) கூலி தொழிலாளி. இவர் தனது இருசக்கர வாகனத்தில் நேற்று (ஜன.1) செல்லும் பொழுது நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை அப்பகுதி மக்கள் அரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தகவல் தெரிவித்தனர். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News January 2, 2026

தருமபுரியில் இலவச பயிற்சி வகுப்புகள் – ஆட்சியர் அறிவிப்பு!

image

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த GROUP II-IIA முதன்மை தேர்வு மற்றும் 2026ஆம் ஆண்டிற்கான GROUP II-IIA முதல்நிலைதேர்வு ஆகிய தேர்வுகளுக்கு, இலவச பயிற்சி வகுப்புகள் 05.01.2026 அன்று முதல் தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் துவங்கப்பட்டு திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை வாரந்தோறும் தொடர்ந்து நடைபெற உள்ளது. என தருமபுரி கலெக்டர் சதீஷ் தகவல்.

News January 2, 2026

தருமபுரியில் இலவச பயிற்சி வகுப்புகள் – ஆட்சியர் அறிவிப்பு!

image

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த GROUP II-IIA முதன்மை தேர்வு மற்றும் 2026ஆம் ஆண்டிற்கான GROUP II-IIA முதல்நிலைதேர்வு ஆகிய தேர்வுகளுக்கு, இலவச பயிற்சி வகுப்புகள் 05.01.2026 அன்று முதல் தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் துவங்கப்பட்டு திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை வாரந்தோறும் தொடர்ந்து நடைபெற உள்ளது. என தருமபுரி கலெக்டர் சதீஷ் தகவல்.

error: Content is protected !!