News December 20, 2025

தருமபுரி: ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேவை!

image

தருமபுரி மாவட்டம் முழுவதும் உள்ள ஊர்க்காவல் படைக்கு 31 ஆண்கள் மற்றும் 1 பெண் உட்பட 32 காலி பணியிடங்களுக்கு தற்காலிகமாக நிரப்பப்பட உள்ளன. தருமபுரி மாவட்டம் பூர்வமாக கொண்டவர்கள் மட்டும், வரும் டிச.31ல் அசல் சான்றிதழ்களுடன் தருமபுரி வட்டாட்சியர் அலுவலகத்தில் நேரில் கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம். இதற்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வியடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Similar News

News December 21, 2025

தருமபுரி: குடும்ப பிரச்சனையால் விபரீத முடிவு!

image

தொப்பூர் அருகே உள்ள பப்பிரெட்டியூர் கிராமத்தைச் சேர்ந்த எலக்ட்ரீஷியன் அருண் (40), குடும்பப் பிரச்சினை காரணமாக வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். மயங்கிக் கிடந்த அவரை உறவினர்கள் மீட்டு மேட்டூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்கின்றனர்.

News December 21, 2025

தருமபுரி: அரசு பேருந்து ஏறி உடல் துண்டாகி பலி!

image

தருமபுரியில் இருந்து அரூர் செல்லும் 2 பேருந்துகள், நேற்று காலை (டிச.20) வெளியே வரும்போது நான்கு சக்கர வாகனம் இடது புறமாக நின்று கொண்டு இருந்தது. இதில் இரு சக்கர வாகனத்தில் வந்த ஜெயபிரகாஷ் (55), சாலையில் செல்லும் பொழுது பிக்கப் வாகனம் கதவு திடீரென திறந்தது. அப்போது நிலை தடுமாறிய அவர் பேருந்து முன் விழுந்தார். இதில் பேருந்து அவர் மேல் ஏறி, உடல் இரண்டாக பிரிந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

News December 21, 2025

தருமபுரி: சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கு தேர்வு!

image

தருமபுரியில் தமிழகக் காவல்துறையில் காலியாக உள்ள சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு டிசம்பர்-21 (ஞாயிற்றுக்கிழமை) தேர்வு இரண்டு கட்டங்களாக, காலை அமர்வு முதன்மையான தேர்வு காலை 10:00 மணி முதல் 12:30 மணி வரையும், குறிப்பாக தேர்வர்கள் காலை 8:00 மணிக்கே மையத்திற்கு வர வேண்டும். அதேபோல பிற்பகல் அமர்வு தமிழ் தகுதித் தேர்வு மாலை 3:30 மணி முதல் 5:10 மணி வரை நடைபெற உள்ளது.

error: Content is protected !!