News October 11, 2025

தருமபுரி: உதவித்தொகை விண்ணப்பிக்க ஆட்சியர் அறிவிப்பு!

image

இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரி கல்வி உதவித்தொகை (PM-YASASVI) திட்டத்தின் கீழ், ஒபிசி, இபிசி மற்றும் டிஎன்டி மாணவர்கள் தேசிய கல்வி உதவித்தொகை இணையதளம் (http://Scholarships.gov.in) வழியாக விண்ணப்பிக்கலாம் என தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ் தெரிவித்தார். தகுதியுடைய மாணவர்கள் பள்ளி கல்வியில் சிறந்து விளங்கி இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் அவர் கூறினார்.

Similar News

News October 11, 2025

தருமபுரி: BC, MBC மாணவர்களுக்கு கடன் உதவி வழங்கும் திட்டம்

image

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவியர்களுக்கு வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி படிக்க கடன் வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் 100 மாணவர்கள் பயனடையலாம். தகுதியுள்ள மாணவர்கள் இத்திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என கலெக்டர் சதீஷ் தெரிவித்துள்ளார்.

News October 11, 2025

தருமபுரி: ஊராட்சி செயலர் பணியிடங்கள் அறிவிப்பு

image

தருமபுரி, கிராம ஊராட்சி செயலர் காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. மொத்தம் 1,450 பணியிடங்களுக்கு இன்று முதல் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வேண்டிய இணையதளம்: www.tnrd.tn.gov.in. விண்ணப்பித்தவர்களுக்கு டிசம்பர் முதல் வாரத்தில் நேர்காணல் நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. தகுதியுள்ள தருமபுரி மக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

News October 11, 2025

தருமபுரி: காளான் வளர்ப்பு பயிற்சி அறிவிப்பு

image

பாப்பாரப்பட்டி வேளாண்மை அறிவியல் நிலையத்தில் இன்று முதல் 11/10/25 முதல் 14/11/2025 வரை. காளான் வளர்ப்பு பற்றிய பயிற்சி தொடர்ந்து 26 நாட்கள் நடைபெற உள்ளது. வயதுவரம்பு 18 முதல் 35 வயதிற்கு உட்பட்ட 10ஆம் வகுப்பு தேர்ச்சி இருபாலாரும் பங்கு பெறலாம். மேலும் விவரங்களுக்கு வேளாண்மை அறிவியல் நிலைய உதவி பேராசிரியர். முனைவர் தெய்வமணி 9626674884 என்ற எண்ணில் பதிவு செய்யுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.

error: Content is protected !!