News October 22, 2025
தருமபுரி: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

தருமபுரி மாவட்டம் முழுவதும் இன்று அக்.22 இரவு இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மாவட்ட காவல் துறையால் வெளியிடப்பட்டுள்ளது. காவல் கண்காணிப்பாளர் தலைமையில் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மற்றும் தொடர்புக்கொள்ள தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 100 அல்லது 04342-233850 உதவி எண்ணை தொடர்பு கொள்ளவும்.இதை அனைவருக்கும் ஷேர் செய்யவும்
Similar News
News February 14, 2026
தருமபுரி: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000, அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News February 14, 2026
தருமபுரியில் அதிர்ச்சி!

தர்மபுரி அருகே கோவிலூர் ஓம்சக்தி கோயிலில் அம்மன் கழுத்தில் இருந்த தங்கத்தாலி திருடப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பூசாரி குமரன் பூஜையை முடித்துச் சென்றபின், மர்ம நபர்கள் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் ஊழியர்கள் வந்து பார்த்தபோது தாலி காணாமல் போனது தெரிந்தது. புகாரின் பேரில் மதிகோன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
News February 14, 2026
தருமபுரி: பிஞ்சி உயிர் துடிதுடித்து பலி!

இண்டூர் அருகே சந்தாரப்பட்டியைச் சேர்ந்த சதீஷ் – மாரியம்மாள் தம்பதிக்கு 3வது பெண் குழந்தை பிறந்தது. தனியார் மருத்துவமனையில் பிறந்து வீடு திரும்பிய குழந்தைக்குத் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனடியாகத் தருமபுரி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்குப் பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


