News January 18, 2026
தருமபுரி: அரூரில் விதி மீறியதால் அதிரடி வேட்டை!

தருமபுரி மாவட்டம் அரூரில், திருவள்ளுவர் தின மதுவிலக்கு உத்தரவை மீறி எப்.எல்-2 கிளப் பாரில் மது விற்பனை செய்யப்படுவதாகப் புகார் எழுந்தது. மாவட்டம் முழுவதும் மதுக்கடைகளை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டிருந்த நிலையில், விதிகளை மீறிச் செயல்பட்ட அந்த பார் குறித்து அரூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விதியை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Similar News
News April 10, 2026
தருமபுரி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு !

தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்றத் தொகுதிகளில் பெறப்பட்ட 128 வேட்புமனுக்களில், பரிசீலனை மற்றும் திரும்பப் பெறுதலுக்குப் பின் 83 பேர் இறுதி வேட்பாளர்களாகப் போட்டியிடுகின்றனர். பென்னாகரம் (22), அரூர் (14), தர்மபுரி (19), பாப்பிரெட்டிப்பட்டி (14) மற்றும் பாலக்கோடு (14) என மொத்தம் 83 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் திமுக, அதிமுக, பாமக தவெக மற்றும் சுயேச்சைகளும் போட்டியிடுகின்றனர்.
News April 10, 2026
பறக்கும் படையினர் பறிமுதல் செய்யப்பட்ட விவரங்கள்

சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி தேர்தல் அலுவலர்கள், பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் 08.04.2026 காலை 6.00 மணி முதல் 09.04.2026 காலை 6.00 மணி வரை பறக்கும் படை குழு (FST) மற்றும் நிலையான கண்காணிப்புக்குழு (SST) வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது பறிமுதல் செய்யப்பட்ட விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
News April 10, 2026
பறக்கும் படையினர் பறிமுதல் செய்யப்பட்ட விவரங்கள்

சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி தேர்தல் அலுவலர்கள், பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் 08.04.2026 காலை 6.00 மணி முதல் 09.04.2026 காலை 6.00 மணி வரை பறக்கும் படை குழு (FST) மற்றும் நிலையான கண்காணிப்புக்குழு (SST) வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது பறிமுதல் செய்யப்பட்ட விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.


