News July 8, 2025

தருமபுரி அரசு கலை கல்லூரியில் கல்லூரி சந்தை

image

தருமபுரி அரசு கலை & அறிவியல் கல்லூரியில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் 2025-26 ஆம் ஆண்டிற்கான மாவட்ட வழங்கல் & விற்பனை சங்கத்தின் மூலம் பொருட்கள் விற்பனை & கண்காட்சி இன்று முதல் ஜூலை 10 வரை நடைபெறுகிறது. இந்த கல்லூரி சந்தையை மாவட்ட ஆட்சியர் சதீஷ் இன்று காலை துவக்கி வைத்தார். இதில், கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்று பயனடைய மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News August 24, 2025

மருவுக்கு தடவும் மருந்து குடித்த குழந்தை பலி

image

மொரப்பூர் அடுத்த ஆர்.கோபிநாதம்பட்டியை சேர்ந்தவர் ராமு. கடந்த 21 ஆம்தேதி ராமுவின், மூன்றரை வயது மகள் கனிஷ்கா, வீட்டில் சிறிய பாட்டிலில் இருந்த, தோல் மருக்களுக்கு – தடவப்படும் மருந்தை தவறுதலாக குடித்துள்ளார். அதனால், கனிஷ்கா மேல்சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு நேற்று‌ அவர் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்

News August 24, 2025

தர்மபுரி: ரேஷன் கார்டுதாரர்கள் இத நோட் பண்ணிக்கோங்க

image

தர்மபுரி மக்களே! ரேஷன் கடைகளில் பொருட்கள் சரியாக வழங்கப்படாமலும், தரமில்லாத பொருட்களையும் வழங்கினால், இனி கவலை வேண்டாம். அது போல் பணியாளர்கள் சரியான நேரத்திற்கு வராமல், பொதுமக்களிடம் முறையாக நடந்துகொள்ளாமல் இருப்பதும் சில இடங்களில் நடக்கின்றன. இது போன்ற பிரச்சனைகள் உங்கள் பகுதியில் நடந்தால் உடனே 1967(அ)1800-425-5901 அழைத்து புகார் அளிக்கலாம். ஷேர் பண்ணுங்க

News August 24, 2025

தர்மபுரி: மாணவிக்கு பாலியல் தொல்லை; முதல்வர் கைது

image

தர்மபுரி மாவட்டம் ஏரியூரில் உள்ள தனியார் பள்ளியில் முதல்வராக பணிபுரிந்து வரும் வினுலோகேஸ்வரன், அதே பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வரும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது தொடர்பாக மாணவி பெற்றோரிடம் கூற, பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வினுலோகேஸ்வரனை போக்ஸோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

error: Content is protected !!