News November 16, 2025
தருமபுரியில் 419 பேர் ஆப்சென்ட்!

தருமபுரியில் நேற்று (நவ.15) நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வை எழுத விண்ணப்பித்திருந்த 3,511 தேர்வர்களில் 3092 தேர்வர்கள் தேர்வு எழுதினர். அதில், 419 தேர்வர்கள் வருகை புரியவில்லை. மொத்த விண்ணப்பதாரர்கள்- 3511 தேர்விற்கு வருகை புரிந்தோர் -3092 என்ன தருமபுரி மாவட்ட ஆட்சியர் சதீஷ் தெரிவித்துள்ளார். மேலும், தேர்வு நடைபெறும் இடத்திற்கு நேரில் சென்றும் ஆட்சியர் பார்வையிட்டார்.
Similar News
News November 16, 2025
தருமபுரி: ஆடு, மாடு வளர்க்க ரூ.50 லட்சம் வரை மானியம்!

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு உத்யமி மித்ரா திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் <
News November 16, 2025
தருமபுரி: போக்ஸோ வழக்கு; இளைஞர் தூக்கிட்டு தற்கொலை!

தருமபுரி, பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் கோகுல்நாத் (22) இவர் தனது உறவினரான சிறுமியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இதுகுறித்து பொம்மிடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, வழக்கு தருமபுரி போக்ஸோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதனால் மன உளைச்சலில் இருந்த கோகுல்நாத் நவ.14ஆம் தேதியன்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தருமபுரி நகர போலீசார் விசாரிக்கின்றனர்.
News November 16, 2025
தருமபுரி: இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவலர்கள் விவரம்!

தருமபுரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று (நவ.15) இரவு நேர ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆய்வாளர் குணவரஹ்மான் தலைமையில், அதியமான்கோட்டை பகுதியில் சிவபெருமாள் , தோப்பூரில் பிரபாகரன் , மதிகோன்பாளையத்தில் தமிழழகன் மற்றும் ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். பொதுமக்கள் அவசர உதவிக்கு இவர்களை அணுகலாம்.


