News December 15, 2025
தருமபுரியில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயன்!

தருமபுரி ஆட்சியர் ரெ.சதீஷ், இன்று (டிச.15) செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மாவட்டத்தில் கடந்த நான்கரை ஆண்டுகளில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் 2,84,091 குடும்பத் தலைவிகளுக்கு ரூ.738.63 கோடி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும்,நேற்று நடைபெற்ற அரசியல் நிகழ்வில் பங்கேற்ற முதலமைச்சர் கலைஞர் மகளிர் உரிமை தொகை உயர்த்தி வழங்கப்படும் என தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News December 19, 2025
தருமபுரியில் 12 பேர் மீது வழக்குபதிவு!

தருமபுரி, பென்னாகரம் பஸ் ஸ்டாண்ட் அருகே, SIR எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில், ஈடுபட்ட புரட்சிகர அமைப்பை சேர்ந்தவர்கள் மீது நேற்று (டிச.18) வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் சத்தியநாதன்(46) விஜய குமார்(45) கோபிநாத்(41) பெருமாள்(38) உள்ளிட்ட 12 பேர் மீது, அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் செய்யப்பட்டதாகவும் & பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக கூறி பென்னாகரம் எஸ்.எஸ்.ஐ மாதையன் வழக்குப்பதிவு செய்துள்ளார்.
News December 19, 2025
BIG NEWS: தருமபுரியில் 81,000 பேர் நீக்கம்

இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணைப்படி தருமபுரி மாவட்டத்தில் 5 சட்டமன்ற தொகுதிகளிலும் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்-2026 பணிகளுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 12 லட்சத்து 3 ஆயிரத்து 917 பேரில் 81,515 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளில் 6.34% வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக என தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சதிஸ் கூறினார்.
News December 19, 2025
தருமபுரி: கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000/- APPLY…!

டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக தருமபுரி மாவட்டத்தில் உள்ள முதல் இரண்டு குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு மூன்று தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. இங்கு <


