News January 6, 2026

தருமபுரியில் விஷம் குடித்து தற்கொலை!

image

மொரப்பூர் அருகே உள்ள கந்தகவுண்டனூர் பகுதியைச் சேர்ந்தவர் மாது(55). விவசாயியான இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு அவதிக்குள்ளாகி வந்தார். இந்நிலையில், கடந்த டிச.28ஆம் தேதி வலி தாங்க முடியாமல் பூச்சி மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றார். தொடர்ந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர், பலனின்றி நேற்று(ஜன.5) உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Similar News

News February 5, 2026

தருமபுரி: வலியால் கிடைத்த மாத்திரையை உண்ட மூதாட்டி!

image

நல்லம்பள்ளி அடுத்த கோடியூரை சேர்ந்தவர் பெரியமாதம்மாள் (65). பல நாட்களாக வயிற்று வலியால் துடித்த இவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் கடந்த 3-ம் தேதி வயிற்று வலி அதிகமானதால் வீட்டில் வைத்திருந்த மாத்திரைகளை அதிகளவு தின்றார். பதறிப்போன உறவினர்கள் மூதாட்டியை மருத்துவமனையில் சேர்ந்தனர். ஆனால் மூதாட்டி உயிரிழந்தார். இது குறித்து அதியமான்கோட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News February 5, 2026

தருமபுரியில் மின்சாரம் பாய்ந்து துடிதுடித்து பலி!

image

மெணசி விழுதிப்பட்டியை சேர்ந்த தம்பதி சிலம்பரசன் (43). இவர் சேலத்தில் தனியார் நூற்பாலையில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கிணற்றில் மின் மோட்டாரை பார்க்க சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அவரது மனைவி சென்று பார்த்த போது சிலம்பரசன் மின்சாரம் தாக்கி மோட்டார் அறையில் இறந்து கிடந்தார். இது பற்றி பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 5, 2026

தர்மபுரி : ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் விவரம்

image

தருமபுரி மாவட்டத்தில் நேற்று (பிப்- 4) இரவு முதல் இன்று காலை (பிப்- 5) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!