News November 23, 2025
தருமபுரியில் மளமளவென உயர்ந்த விலை!

தருமபுரி: சபரிமலை சீசன் எதிரொலியாக தருமபுரி மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்ந்து ஒரு கிலோ குண்டுமல்லி ரூ.1,000-க்கு விற்பனையானது. இதேபோன்று சன்னமல்லி, கனகாம்பரம் ஆகிய பூக்களின் விலையும் ஒரு கிலோ ரூ.1,000-க்கு விற்பனையானது.
இதேபோன்று ஜாதிமல்லி ரூ.700-க்கும், காக்கட்டான் ரூ.600-க்கும். நந்தியாவட்டம் ரூ.500-க்கும், அரளி ரூ.200-க்கும். செவ்வரளி ரூ.400-க்கும், சம்பங்கி ரூ.180-க்கும் விற்பனையானது.
Similar News
News February 2, 2026
தருமபுரி: மதுபோதையில் அட்டூழியம்; போலீசார் அதிரடி!

பாலக்கோடு புதூர் மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (44). இவர் மதுபோதையில் அந்த பகுதியில் பொதுமக்களிடம் ரகளை செய்துள்ளார். இதேபோல எலங்காலப்பட்டியை சேர்ந்த ராமர் (60) என்பவரும் பொது மக்களிடம் ரகளையில் ஈடுபட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த பாலக்கோடு போலீசார் விரைந்து சென்று பொதுமக்களை தொந்தரவு செய்த 2 பேரையும் கைது செய்தனர்.
News February 2, 2026
தருமபுரி: இனி Whatsapp-ல் ஆதார் அட்டை!

தருமபுரி மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அல்லது <
News February 2, 2026
தருமரியில் வசமாக சிக்கிய வாலிபர்!

ஒட்டப்பட்டி ஏரிக்கரை பகுதியில் போலீசார் நேற்று (பிப்.1) ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது போலீசாரை கண்டு தப்பி ஓடிய வாலிபரை துரத்தி பிடித்து சோதனை செய்ததில் அவரிடம் 200 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் எட்டிமரத்துபட்டி கிராமத்தை சேர்ந்த தமிழ்ச்செல்வன் (20) தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.


