News August 15, 2024
தருமபுரியில் மதுபான கடைகள் மூடல்

சுதந்திர தினமான இன்று தருமபுரியில் உள்ள அனைத்து மதுபானக் கடைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மீறி கடைகளில் மதுபானங்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் சாந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார். அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள், அவற்றுடன் இணைந்த மதுக்கூடங்கள் என அனைத்தும் நாளை காலை 12.00 மணி வரை மூட உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News September 16, 2025
தருமபுரியில் ஊக்கத்தொகையுடன் திறன் மேம்பாட்டு பயிற்சி

தருமபுரியில் பதிவுபெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கு செப்.18 முதல் கடகத்தூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 7 நாட்கள் திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கப்படுகிறது. இப்பயிற்சியில் பங்கேற்போருக்கு சான்றிதழ், இலவச உணவுடன், ரூ.5,600 ஊக்கத்தொகையும் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள், தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க!
News September 16, 2025
தர்மபுரி: உணவு பாதுகாப்புத் துறை திடீர் ஆய்வு

தர்மபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கைலாஷ் குமார் தலைமையில், ஒட்டப்பட்டி, தொழில் மையம் மற்றும் அதியமான் கோட்டை பகுதிகளில் உள்ள துரித உணவகங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில், காலாவதியான 2 கிலோ உணவுகள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன. மேலும், தடைசெய்யப்பட்ட நெகிழிப் பைகளை பயன்படுத்திய கடை உரிமையாளருக்கு ரூ.2,000 அபராதம் விதிக்கப்பட்டது.
News September 16, 2025
தர்மபுரியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்

தர்மபுரி மாவட்டத்தில் இன்று (செப்.16) முகாம் நடைபெறும் இடங்கள்:
✅ தர்மபுரி நகராட்சி – பிபிசி திருமண மண்டபம்
✅ தர்மபுரி வட்டாரம் – புதிய பஞ்சாயத்து அலுவலகம் எதிரில், மண்டு வளாகம்
✅ பென்னாகரம் வட்டாரம் – VPRC கட்டிடம், ஜெலமாரம்பட்டி
✅ நல்லம்பள்ளி வட்டாரம் – PUMS, தின்னஹள்ளி பள்ளி வளாகம்
✅ ஏரியூர் வட்டாரம் – ராமசாமி பொன்னம்மாள் திருமண மண்டபம்
✅ ஏரியூர் வட்டாரம் – கெந்தனஹள்ளி சமுதாயக் கூடம் (SHARE IT)