News October 22, 2025
தருமபுரியில் பள்ளிகளுக்கு விடுமுறை

தருமபுரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழையின் காரணமாக பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கு நாளை 23.10.2025 (வியாழக்கிழமை) விடுமுறை அளிக்கப்படுகிறது. இதனை ஈடு செய்யும் விதமாக (நவ.15)சனிக்கிழமை அன்று வேலை நாளாக அறிவித்து விடுத்துள்ளார். தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் ரெ.சதீஸ் அவர்கள் தெரிவித்துள்ளார்.
Similar News
News October 23, 2025
பருவமழை கட்டுப்பாட்டு அறை – அவசர எண்கள்

வடகிழக்கு பருவமழையையொட்டி, பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் தருமபுரி ஆட்சியர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. அவசரத் தேவைகள், சேதங்கள், உயிரிழப்புகள் குறித்து தகவல் தெரிவிக்க தொலைபேசி எண்கள்: 1077, 04342-231077, 04342-231505, 04342-230067 என ஆட்சித்தலைவர் ரெ. சதீஸ், இ.ஆ.ப., தெரிவித்தார்
News October 22, 2025
சாலை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் மாற்று பாதை

அரூர் (வழி) தானிப்பாடி சாலையில் பருவமழையினால் வெள்ளம் பெருகெடுத்து ஓடுவதால் கி.மீ 47/8 ல் மாற்றுப்பாதைக்கு மேல் தண்ணீர் செல்வதால் சாலையில் போக்குவரத்து மற்றும் பொதுமக்களை தடுத்து நிறுத்தி பாதுகாப்பு அமைத்து மாற்றுப்பாதை செல்ல மேலே உள்ள புகைப்படத்தை பார்த்து தெரிந்து கொள்ளவும். தர்மபுரியில் உள்ள அனைத்து மக்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.
News October 22, 2025
தருமபுரி: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

தருமபுரி மாவட்டம் முழுவதும் (அக்.22) இரவு இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மாவட்ட காவல் துறையால் வெளியிடப்பட்டுள்ளது. காவல் கண்காணிப்பாளர் தலைமையில் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மற்றும் தொடர்புக்கொள்ள தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 100 அல்லது 04342-233850 உதவி எண்ணை தொடர்பு கொள்ளவும். இதை அனைவருக்கும் ஷேர் செய்யவும்.