News August 18, 2024

தருமபுரியில் நாளை கனமழைக்கு வாய்ப்பு

image

தருமபுரி மாவட்டத்தில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால், கடந்த சில நாட்களாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்தது. அண்மையில் பெய்த மழையால், குடியிருப்பு பகுதிகளில் முழுவதும் வெள்ளம் சூழ்ந்தது. நாளை கனமழை பெய்யும் என்பதால், தாழ்வான பகுதிகள் மற்றும் சாலைகளில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளது.

Similar News

News September 16, 2025

தருமபுரியில் திறன் மேம்பாட்டு பயிற்சி

image

தருமபுரியில் பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கு, செப்டம்பர் 18 முதல் கடகத்தூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 7 நாள் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படுகிறது. பயிற்சியில் பங்கேற்போருக்கு சான்றிதழ், இலவச உணவு, சிற்றுண்டி வழங்கப்படுவதுடன், ரூ.5,600 ஊதியம் வங்கி கணக்கில் செலுத்தப்படும். விருப்பமுள்ளவர்கள் தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News September 15, 2025

தருமபுரி ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

2025-ஆம் ஆண்டு தீபாவளி (அக்.20) முன்னிட்டு, தருமபுரி மாவட்டத்தில் தற்காலிக பட்டாசுக்கடைகள் அமைக்க விரும்புவோர் 10.10.25-க்குள் விண்ணப்பங்கள் https://www.tnesevai.tn.gov.in முகவரியில் அல்லது இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஸ், இ.ஆ.ப., தெரிவித்துள்ளார். வெடிபொருள் சட்டம், பாதுகாப்பு விதிமுறைகள், தீ தடுப்பு உபகரணங்கள் உள்ளிட்ட அனைத்தையும் கடைப்பிடிக்க வேண்டும்.

News September 15, 2025

தருமபுரியில் மாபெரும் இலவச பரிசோதனை முகாம்

image

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் காரஓனியில் உள்ள உதிருமண மண்டபத்தில் நாளை (செ.16), தர்மபுரி அரிமா சங்கம் மற்றும் தனியார் மருத்துவமனை இணைந்து மருத்துவ முகாம் நடைபெறவிருக்கிறது. இதில், இருதயம், சர்க்கரை நோய், எலும்பு மூட்டு தேய்மானம் பரிசோதை செய்யப்படும். தெரிந்தவர்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!