News December 25, 2025
தருமபுரியில் நாட்டு வெடிகுண்டு வைத்து பரபரப்பு!

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள எலுமிச்சனஅள்ளி காப்புகாட்டில் முயல், காட்டுபன்றி உள்ளிட்ட வன விலங்குகளை வேட்டையாட அந்தேரிகாடு கிராமத்தை சேர்ந்த சேட்டு (45), மாது (45) ஆகியோர் நேற்று முன்தினம் இரவு நாட்டு வெடிகுண்டுகளை வைத்து விட்டு வந்துள்ளனர். இதனை அறிந்த வனத்துறையினர், வெடிகுண்டுகளை கைப்பற்றி இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின், தருமபுரி சிறையில் அடைத்தனர்.
Similar News
News December 25, 2025
தருமபுரி: 12th PASS போதும் சூப்பர் வேலை ரெடி!

தருமபுரி மக்களே, இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காலியாக உள்ள 394 Non Executive பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. இதற்கு 18 – 26 வயதுகுட்பட்ட 12th, டிப்ளமோ, B.Sc டிகிரி முடித்தவர்கள் வருகிற ஜன.9ம் தேதிக்குள் இங்கு <
News December 25, 2025
தருமபுரியில் லஞ்சமா? இதை பண்ணுங்க!

தருமபுரி மக்களே.. போலீஸ், தாசில்தார், MLA, கவுன்சிலர் போன்ற அரசு தொடர்புடைய ஊழியர்கள் தங்களது வேலைகளை முறையாக செய்யாமல் உங்களிடம் லஞ்சம் கேட்டால் கவலை வேண்டாம். இதனை தருமபுரி மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரியிடம், (04342-260042) இந்த எண்ணை தொடர்ப்பு கொண்டு புகாரளிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை தெரிந்தவர்களுக்கு SHARE பண்ணுங்க!
News December 25, 2025
தருமபுரி: தொப்பூர் அருகே தொடரும் விபத்து!

தருமபுரி, நல்லம்பள்ளி தொப்பூர் கட்டமேடு அடுத்துள்ள கணவாய் பகுதியில், இன்று (டிச.25) விடியற்காலை காலை 2 மணி அளவில் கனரக வாகனா லாரி தடுப்புச் சுவர் மீது மோதி விபத்துக்குள்ளாது. இதில், வாகன ஓட்டுநர் சிறிய காயங்கள் இன்றி உயிர் தப்பினார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி, சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு நேர்ந்தது. இதனை அப்பகுதி போலீசார் விசாரித்து வருகின்றனர்.


