News January 2, 2026
தருமபுரியில் சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா!

தருமபுரி மாவட்டத்தில் உள்ள சிறுபான்மையின இஸ்லாமியர்கள் கிறிஸ்தவர்கள் புத்த மதத்தினர் சமயநர்கள் சீக்கியர்கள் ஆகியோர்களின் உரிமைகள் மற்றும் சிறுபான்மையுருக்கான நலத்திட்டங்கள் சென்றடைய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா கொண்டாட இருக்கிறது. இதனை வருகின்ற ஜன.08 மாலை 4.00 மணிக்கு மா.ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெறுகிறது. என ஆட்சியர் இன்று அறிவித்தார்.
Similar News
News January 10, 2026
தருமபுரி: அனைத்து CERTIFICATES-ம் இனி Whatsapp-ல்!

தருமபுரி மக்களே.., பிறப்பு சான்றிதழ், வீட்டு வரி, குடிநீர் வரி, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. எங்கேயும் அலையாமல், வீட்டில் இருந்தே 7845252525 என்ற WHATSAPP எண்ணிற்கு ஒரு HI மட்டும் அனுப்பி, இந்த சேவைகளைப் பயன்படுத்தலாம். நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
News January 10, 2026
தருமபுரியில் மழையால் மின்தடையா? உடனே CALL!

தருமபுரி மக்களே.. சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நேரத்தில் மின்தடை தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டால் லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். TNEB Customer Care எண்ணான 94987-94987-ஐ தொடர்புகொண்டு, மின் இணைப்பு எண் மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், லைன்மேன் வந்து சரிசெய்யவர். (அ) 9445850811 இந்த வாட்ஸ் ஆப் எண்ணிலும் புகார் செய்யலாம். SHARE IT!
News January 10, 2026
தருமபுரி: பிரிந்த மனைவி; கணவன் விபரீத முடிவு!

பாப்பிரெட்டிப்பட்டி, கர்த்தானூரில் உள்ள ஓட்டலில் வேலை செய்து வந்தவர் முருகன் (45). மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார். மனவேதனையில் இருந்த இவர், தான் தங்கியிருந்த அறையில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கோபிநாதம் பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


