News February 12, 2026

தருமபுரியில் கொடூர வன்முறை!

image

கம்பைநல்லூர் அருகே மாரப்பநாயக்கன்பட்டியை சேர்ந்த முருகேசன் மனைவி கோமதி (35). இவருக்கும். அதே பகுதியை சேர்ந்த நாகராஜ் (48), சுபாஷ் (29) ஆகியோருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இந்தநிலையில் நாகராஜ், சுபாஷ் இருவரும் கோமதியை தகாத வார்த்தைகளால் திட்டி, கத்தியால் சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. கோமதி அளித்த புகாரின் பேரில் கம்பைநல்லூர் போலீசில் 2 பேரையும் கைது செய்தனர்.

Similar News

News February 13, 2026

, அடுத்தடுத்து மூன்று கோவில்களில் கொள்ளை

image

இன்று காரிமங்கலம் அருகே பொம்மஅள்ளியில் மகாசக்தி மாரியம்மன் கோவில், சின்ன மாரியம்மன் கோவில் மற்றும் ஓம் சக்தி மாரியம்மன் கோவில்களில் உண்டியல்கள் உடைக்கப்பட்டு அம்மன் தங்க நகை, குத்துவிளக்கு உட்பட பூஜை பொருட்கள் மற்றும் காணிக்கை பணம் ஒரு லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. சிசிடிவி கேமரா ஹார்ட் டிஸ்க் திருடப்பட்டுள்ளது. இது குறித்து காரிமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News February 12, 2026

கால்நடை வளர்ப்பவர்கள் கவனத்திற்கு

image

தருமபுரி மாவட்டத்தில் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வருபவர்கள்
தகுதி வாய்ந்த B.V.Sc படித்து (Tamil Nadu State Veterinary Council) பதிவு பெற்ற மருத்துவர்களிடம் மட்டுமே கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.
போலி கால்நடைமருத்துவர்கள், பராம்பரிய வைத்தியர்களை அடையாளம் கண்டு தவிர்க்க வேண்டும்.எனத தர்மபுரி மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ் தெரிவித்தார்.

News February 12, 2026

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

பிப்-12 தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த குரலிசை, பரதநாட்டியம், ஓவியம், தவில்,வயலின்,மிருதங்கம்,வீணை, புல்லாங்குழல் உள்ளிட்ட இசைக்கருவிகள் அனைத்து வகையான நிகழ்த்துக் கலைகள் மற்றும் கவின் கலைகளை முழு நேரமாக அல்லது பகுதி நேரமாக மேற்கொள்ளும் 18 வயதுக்கு மேற்பட்டக் கலைஞர்கள் அடையாள அட்டைபெற விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு 0427-2386197 தொடர்புகொண்டு விண்ணபிக்க வேண்டும்.ஆட்சியர் சதிஸ் தகவல் தெரிவித்தார்

error: Content is protected !!