News January 22, 2026

தருமபுரியில் இன்று மின் தடை; உங்க எரிய இருக்கா?

image

தருமபுரியில் பென்னாகரம் மற்றும் மொரப்பூர் துணை மின் நிலையங்களுக்குட்டபட்ட பகுதிகளில் இன்று (ஜன.22) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி நாகதாசம்பட்டி, பாப்பரப்பட்டி, ஏரியூர், பெரும்பாலை, ஒகேனக்கல், தாசம்பட்டி, நல்லாம்பட்டி, மொரப்பூர், நைனாகவுண்டம்பட்டி, ராசலாம்பட்டி, சென்னம்பட்டி, கிட்டனூர், நாச்சினாம்பட்டி சுற்று வட்டார பகுதிகளில் காலை 9 முதல் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும்.

Similar News

News January 28, 2026

தருமபுரி: பெண் அதிரடி கைது!

image

காரிமங்கலம் போலீசார் பாலக்கோடு சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, சட்டவிரோதமாக மது விற்ற அனுமந்தபுரம் பகுதியைச் சேர்ந்த சிவகாமி (45) என்பவரைப் பிடித்தனர். அவரிடமிருந்து 26 மது பாட்டில்களைப் பறிமுதல் செய்த போலீசார், சிவகாமியைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் நேற்று பல்வேறு பகுதிகளில் போலீசார் சோதனை செய்தனர்.

News January 28, 2026

தருமபுரி: +1 மாணவன் பரிதாப பலி!

image

ஏரியூர் அருகே குருக்கலையனூரைச் சேர்ந்த +1 மாணவன் சர்மா 16, தனது தாய் செடிகளுக்கு அடித்த களைக்கொல்லி மருந்தை கவனக்குறைவாகத் தொட்டுள்ளார். பின்னர் கையை சரியாகக் கழுவாமல் உணவு உண்டதால், வாந்தி மயக்கம் ஏற்பட்டு சிகிச்சைக்காகக் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சர்மா பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து ஏரியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 28, 2026

தருமபுரி: இரவு ரோந்து ஆய்வாளர்கள் விவரம்

image

தருமபுரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், நேற்று (ஜன.27) இரவு முதல் இன்று காலை 6 மணி வரை ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆய்வாளர் சந்திரசேகர் தலைமையில், அதியமான்கோட்டை பகுதியில் பச்சமுத்து தொப்பூரில் குமரவேல், மதிகோன்பாளையத்தில் முத்து ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். மேலும், பொதுமக்கள் அவசர உதவிக்கு இவர்களை அணுகலாம். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!