News August 12, 2025

தருமபுரியில் ஆட்சிமொழி பயிலரங்கம்

image

தருமபுரி மாவட்டத்தில் இந்த ஆண்டுக்கான ஆட்சிமொழி பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் ஆகஸ்ட் 20-ஆம் தேதி புதன்கிழமை நடைபெறவுள்ளது. அரசு அலுவலகங்களில் ஆட்சிமொழி திட்டத்தை விரைவாகவும், முழுமையாகவும் செயல்படுத்தும் நோக்கில், தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் இந்தப் பயிலரங்கம் நடத்தப்படுகிறது. ஆட்சியர் ரெ.சதீஸ் இந்த தகவலைத் தெரிவித்துள்ளார். அரசு ஊழியர்கள் இதில் கலந்துகொள்ளலாம்.

Similar News

News November 15, 2025

தருமபுரி: SIM CARD வைத்திருப்போர் இதை தெரிஞ்சுக்கோங்க!

image

இந்தியாவில் ஒருவர் 9 சிம் கார்டுகள் மட்டுமே வைத்திருக்க முடியும். எனவே, உங்கள் ஆதார் விவரங்களைப் பயன்படுத்தி வேறு யாராவது சிம் கார்டு வாங்கி இருக்கிறார்களா என்பதைச் சரிபார்க்க, இந்த <>லிங்கில்<<>> உங்கள் எண்ணை உள்ளிட்டு OTP மூலம் உள்நுழையலாம். உங்கள் பெயரில் உள்ள அனைத்து எண்களின் பட்டியலும் காட்டப்படும். அடையாளம் தெரியாத எண்கள் இருந்தால் உடனடியாகப் புகார் செய்து பிளாக் செய்யலாம். ஷேர் பண்ணுங்க!

News November 15, 2025

தருமபுரி: டூ-வீலர் விபத்தில் இளைஞர் பலி!

image

தருமபுரி: மகேந்திரமங்கலம் அடுத்த பொம்மனுார் கிராமத்தை சேர்ந்த சாந்தகுமார் (24) அரசு போக்குவரத்து கழகத்தில் தற்காலிக நடத்துனராக பணி செய்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் பைக்கில் சென்றவர், முல்லாசன-ஹள்ளி அருகே எதிர்பாராமல் முள்வேலியில் மோதி விபத்துக்குள்ளானர். இதில் படுகாயமடைந்த அவர், மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இது குறித்து பாலக்கோடு போலீசார் விசாரிக்கின்றனர்.

News November 15, 2025

தருமபுரியில் 3 நாட்களுக்கு குடிநீர் நிறுத்தம்!

image

தருமபுரியில் வரும் நவ.18, 19, 20 ஆகிய தேதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால், குடிநீர் வினியோகம் நிறுத்தப்படும் என ஆட்சியர் சதீஸ் அறிவித்துள்ளார். அதன்படி, பாலக்கோடு, பாப்பாரபட்டி, காரிமங்கலம், மாரண்டஹள்ளி பேரூராட்சிகளிலும், பென்னாகரம், காரிமங்கலம், பாலக்கோடு ஆகிய ஒன்றியங்களுக்கு உட்பட்ட 68 பஞ்.,களிலும் ஒகேனக்கல் குடிநீர் வழங்க இயலாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!